ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழ்நாடு அறிவியல் நகரம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், ஊரகப் பகுதியில் வசிக்கும் அறிவியலாளர்களின் தனித்துவமான கண்டுபிடிப்புகளை கண்டறிந்து, அவர்களுக்கு, ஊரக கண்டுபிடிப்பாளர் விருது வழங்கப்படுகிறது.சமுதாயத்திற்கு பயனளிக்கும் இரண்டு சிறந்த ஊரக கண்டுபிடிப்புகளுக்கு, இவ்விருது வழங்கப்படும். விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, தலா 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, சான்றிதழ் வழங்கப்படும்.கடந்த 2023 - 24ம் ஆண்டுக்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு, தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டுதல் குறிப்புகளை, www.sciencecitychennai.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆக., 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.