உள்ளூர் செய்திகள்

விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்

சென்னை: எஸ்.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட் இன்று (ஆக.16) விண்ணில் ஏவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், புவியை கண்காணிக்க, இ.ஓ.எஸ்., - 08 செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது.இதை சுமந்தபடி, எஸ்.எஸ்.எல்.வி., - டி3 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, சில தினங்களுக்கு முன் விண்ணில் பாயவிருந்தது. திடீரென ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், இந்த ராக்கெட் இன்று (ஆக., 16) காலை 9: 17 மணி அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக, இஸ்ரோ தெரிவித்துள்ளது. முன்னதாக விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் அதிகாலை 2:30 மணிக்கு துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்