சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை: இன்று நடைபெறவிருந்த சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் கனமழை எச்சரிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் சென்னைப்பல்கலையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னைப் பல்கலை தெரிவித்துள்ளது.