பள்ளயில் குட்டீஸ்களுக்கு பட்டமளிப்பு விழா
பந்தலூர்: பந்தலூர் அருகே உப்பட்டி பாரதமாதா ஆரம்பப் பள்ளியில், குட்டீஸ்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.தலைமை ஆசிரியர் பிஜூஜோசப் வரவேற்றார். பள்ளி தாளாளர் பாதிரியார் வர்கீஸ் தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்.மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பட்டமளித்து பேசினார். நிகழ்ச்சியில் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரபா, பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் உம்மர், முன்னாள் தலைமை ஆசிரியர் மத்தாய் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் பாபு நன்றி கூறினார்.