உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, மதுரை கைப்பந்து கழகம் சார்பில் உடற் கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் மாணவர்கள், சர்வதேச பயிற்சி பட்டறை கல்லுாரியில் நடந்தது.கல்லுாரி முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தனர். மதுரை அமெரிக்கன், அருளானந்தர், வெள்ளைச்சாமி நாடார், காமராஜர் பல்கலை, ஸ்ரீ கிருஷ்ணசாமி, நாகரத்தினம் அங்காளம்மன், ஜி.டி.என்., கல்லுாரிகள், சிவகங்கை கோவை, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த 196 உடற்கல்வி மாணவ ஆசிரியர்கள், ஆசிரியர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர்.துபாய் ஜெம்ஸ் மாடர்ன் அகாடமி பள்ளி ஆசிரியர் ஸ்டாலின் சத்யா அரபு நாடுகளில் உடற்கல்வி வேலை வாய்ப்பு குறித்தும், துபாய் மரியன்னை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மோசஸ் ஆன்லைன் கைப்பந்து நுணுக்கங்கள் குறித்தும் பேசினர். மதுரை மாவட்ட கைப்பந்து கழக தீபன் ராஜ், அகில இந்திய கைப்பந்து கழக விதிகள், புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள விதிகளை விளக்கினார். சர்வதேச கைப்பந்து வீராங்கனை ஜெயப்பிரியா, விளையாட்டு அனுபவங்களையும், சேது பொறியியல் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் சிவ விக்னேஷ் நடுவர்களின் சைகை விளக்கங்கள் குறித்தும் பேசினர். பேராசிரியர் மாலினி ஒருங்கிணைத்தார். கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் யுவராஜ் ஏற்பாடுகள் செய்தார்.