அரசு கலை கல்லூரியில் 2ம் கட்ட கவுன்சிலிங்
இதில் பி.எஸ்.சி., கணினி அறிவியல், கணிதம், விலங்கியல், பி.காம்., வணிகவியல், சி.ஏ., கணினி பயன்பாடு, பி.பி.ஏ., சி.ஏ., வணிக நிர்வாகவியல் கணினி பயன்பாடு மற்றும் தமிழ், ஆங்கிலம் என ஒன்பது பிரிவுகளுக்கு நடக்கவுள்ளது. இணைய வழியில் விண்ணப்பிக்க தவறியவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். காலி இடங்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுவர்.உரிய அசல் மற்றும் நகல் சான்றுகளுடன் 19ம் தேதி காலை காலை 10:00 மணிக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் மாணவ, மாணவியர் செல்ல வேண்டும். கலந்தாய்வு விபரங்கள் www.gascm.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு இளங்கலை, முதுகலை மாணவ, மாணவியருக்கு, 19ம் தேதி முதல் வகுப்பு தொடங்கவுள்ளது.