இன்று நடக்கிறது குரூப் 2 தேர்வு
சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடக்கிறது.தமிழ்நாடு அரசின் தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணைப் பதிவாளர், கிரேடு II, நகராட்சி ஆணையர், கிரேடு-II, உதவிப் பிரிவு அதிகாரி, கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி-ஆல் இத்தேர்வு நடத்தப்படுகிறது.