உள்ளூர் செய்திகள்

பள்ளிகளுக்கு பிரின்டர், ஏ4 பேப்பர் வாங்குவதற்கு நிதி ஒதுக்க கோரிக்கை

பொள்ளாச்சி: அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதி மேம்படுத்தும்போதே, மாணவர்கள் பயன்பாட்டிற்கு உரிய பொருட்களுக்கும் தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பருவ, இடைப்பருவ, காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்க வகுப்புகளுக்கு ஏற்ப, 65 முதல் 120 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இது ஒருபுறமிருக்க, தேர்வின்போது, மாணவர்களே 'ஏ4 சைஸ்' பேப்பர் வாங்கிச் செல்ல வேண்டும். ஆனால், அவர்கள் வாங்கிச் செல்லும் பேப்பர், ஒரே மாதிரியாக இருக்காது என்பதால், பள்ளி தலைமையாசிரியர்கள் அல்லது ஆசிரியர்கள் 'ஏ4 சைஸ்' பேப்பர் வாங்கி வைத்துக் கொள்கின்றனர். இந்த நிலையை சமாளிக்க, அனைத்து அரசு பள்ளிகளுக்கு பிரின்டர் மற்றும் பேப்பர் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கல்வித்துறையினர் கூறுகையில், 'அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பிரின்டர்கள் மற்றும் 'ஏ4 சைஸ்' பேப்பர் வழங்க வேண்டும். இதன் வாயிலாக அந்தந்த பள்ளிக்கு இ-மெயிலில் அனுப்பப்படும் வினாத்தாள் பக்கங்களை நகல் எடுத்து, எளிதாக மாணவர்களுக்கு வழங்கலாம்.அவ்வகையில், வினாத்தாள் கட்டணம் வசூலிக்கப்படுவதும் தவிர்க்கப்படும். மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப 'ஏ4 சைஸ் பேப்பர்' வாங்குவதற்கான நிதி ஒதுக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்