மொபைல் போனில் பேச்சு: 873 மாணவர்கள் சஸ்பெண்ட்
கரூர் அருகே தளவாபாளையத்தில் அமைந்துள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே விடுதிகள் உள்ளன. இரவு 11 மணியளவில் சில மாணவர்கள் மொபைல் போனைப் பயன்படுத்தியுள்ளனர். இதையடுத்து விடுதி அறைகளை ஆய்வு செய்ய வார்டன் மற்றும் அலுவலர்கள் எட்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மொபைலைப் பயன்படுத்துவதைக் கண்டுபிடித்து அந்த மொபைல் போன்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். அப்போது மாணவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து விடுதியில் தங்கியிருந்த 873 மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் உடனடியாக விடுதியிலிருந்து காலி செய்யும்படியும் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.