ஊக்கத்தொகையுடன் சுருக்கெழுத்துப் பயிற்சி
இது குறித்து சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு சுருக்கெழுத்து, கணினி தட்டச்சு, ஆங்கிலம் மற்றும் பொது அறிவு ஆகிய துறைகளில் ஊக்கத் தொகையுடன் கூடிய இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது 10 மாத பயிற்சியாகும். இந்த பயிற்சியைப் பெற மாணவர்கள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்லூரி பயின்று வரும் மாணவர்களும், பட்டம் பெற்றவர்களும் கூட இந்த பயிற்சி பெற தகுதியானவர்கள். மாதம் 500 ரூபாய் ஊக்கத் தொகையாக பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.