ஆசிரியர்களுக்கு மேயர் பாராட்டு
மதுரை: மதுரை மாநகராட்சி வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியைகள் ஜெயசீலி, ரிஸ்வானா, செல்லுார் கட்டபொம்மன் நகர் மாநகராட்சி ஆரம்ப பள்ளி ஆசிரியை சுகன்யா தேவி ஆகியோர் தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது பெற்றனர்.அவர்களை மேயர் இந்திராணி பொன்வசந்த் பாராட்டினார். மாநகராட்சி கல்வி அலுவலர் மாரிமுத்து, ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.