உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் சேர்க்கை தீவிரம்

தேனி: தேனி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு செல்லும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.அதன்படி மாவட்டத்தில் உள்ள 325 அரசு தொடக்கப்பள்ளிகள், 99 நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள், அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்கவும், பள்ளிகளில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் பற்றி விளக்கி வருகின்றனர். மாவட்டத்தில் அங்கன்வாடிகளில் பயிலும் 1726 குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்