பழநியில் ஜப்பான் பக்தர்கள்
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு பல்வேறு வெளிநாடு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிகின்றனர். இந்நிலையில் நேற்று ஜப்பான் டோக்கியோ நகரை சேர்ந்த பக்தர்கள் 50 பேர் திருநீறு, குங்குமம் வைத்தப்படி வருகை புரிந்தனர்.இவர்கள் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் வலம் வந்த பின் தரிசனம் செய்தனர்.