உள்ளூர் செய்திகள்

பி.இ.ஓ., தேர்வு: 201 பேர் ஆப்சென்ட்

விருதுநகர்: விருதுநகரில் நடந்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய வட்டார கல்வி அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வில் 201 பேர் ஆப்சென்ட் ஆகினர்.தமிழகம் முழுவதும் நேற்று வட்டார கல்வி அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வில் நடந்தது. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து இத்தேர்வை எழுத 1,235 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப் பள்ளி, சூலக்கரை கே.வி.எஸ்., ஆங்கிலப் பள்ளி, க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பி.எஸ்., சிதம்பர நாடார் பெண்கள் ஆங்கிலப் பள்ளி என 4 மையங்கள் ஒதுக்கப்பட்டு எழுத்து தேர்வு நடந்தது. இதில் 1225 பேர் விண்ணப்பித்த நிலையில் ஆயிரத்து 24 பேர் மட்டுமே பங்கேற்று வட்டார கல்வி அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வை எழுதினர். 211 பேர் ஆப்சென்ட் ஆகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்