இந்திய கடற்படையில் 250 காலியிடம்: பி.இ., பி.டெக்., பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!
புதுடில்லி: இந்திய கடற்படையில் 250 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 29.இந்திய கடற்படையில், பொது சேவை, பைலட், ஏர் டிராபிக் கன்ட்ரோலர் உள்ளிட்ட பதவிகளுக்கு 250 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.பொது சேவை- 56,பைலட்- 24,நேவல் ஏர் ஆபரேஷன்ஸ்- 21,ஏர் டிராபிக் கன்ட்ரோலர்- 20,தளவாடங்கள்- 20,நேவல் ஆர்மமென்ட் இன்ஸ்பெக்டர் கேடர் (Naval Armament Inspectorate Cadre)- 16கல்வி - 15,பொறியியல் கிளை (Engineering Branch) - 36,மின் கிளை (Electrical Branch)- 42,கல்வி தகுதி என்ன?அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில், பி.இ, பி.டெக் பட்டம் பெற்றி இருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.இந்திய கடற்படையில் சேரும் விதிகளின் படி, மருத்துவ ரீதியாகவும் தகுதி பெற்று இருக்க வேண்டும்.ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம். திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும்.வயது வரம்புவிண்ணப்பதாரர்களுக்கு 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு பணியமர்த்தப்படுவார்கள்.விண்ணப்பிப்பது எப்படி?https://www.joinindiannavy.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது.