உள்ளூர் செய்திகள்

போலீஸ் தேர்வு: 29 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

தமிழகத்தில் 2009ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை ஆண், பெண் போலீசாருக்கான தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.இந்த தேர்வுக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 29 ஆயிரத்து 90 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. வற்றில் பலர் விண்ணப்பங்களில் கையெழுத்து போடாமல் விண்ணப்பித்துள்ளனர். சிலர் டி.டி.,இணைக்காமல் உள்ளனர். சிலர் முகவரி சரியாக எழுதாமல்,பின்கோட்டிற்கு பதிலாக மொபைல் எண்ணை எழுதி வைத்துள்ளனர்.   நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து விண்ணப்பித்தவர்கள் சம்பந்தப்பட்ட எஸ்.பி., அலுவலகத்தில் விளக்கம் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பட்டியல் காரணத்துடன் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்