உள்ளூர் செய்திகள்

திறனாய்வு தேர்வு 3,458 மாணவர் பதிவு

திருப்பூர்: அரசுப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்வர் திறனாய்வு தேர்வு, ஜன. 31ம் தேதி நடக்கவுள்ளது.இந்தத் தேர்வின் வாயிலாக தலா 500 மாணவ, மாணவியர் என ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு கல்வியாண்டுக்கு 10 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்படும்.இத்தேர்வுக்கு டிச. 17ம் தேதி அறிவிப்பு வெளியான நிலையில், இதுவரை 3,458 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தலைமை ஆசிரியர்களிடம் வழங்க ஜன.3., வரை அவகாசம் வழங்கப்பட்டது.பள்ளிகளில் அரையாண்டுத்தேர்வு விடுமுறை என்பதால், விண்ணப்பிக்கும் மாணவர்கள் வசதிக்காக, இன்று (6ம் தேதி) மாலை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.திறனாய்வு தேர்வில் பங்கேற்க விரும்பும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்