உள்ளூர் செய்திகள்

1,288 அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம்

ஈரோடு: பள்ளி கல்வித்துறை மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்க நிதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 1,288 அரசு நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.இதில் கோபி தாலுகா பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன் றிய நடுநிலை பள்ளியில், காய்கறி தோட்டத்துடன் மூலிகை தோட்டம், உயிர்வளி தோட்டம் என முத்தோட்டம் அமைக்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாக, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்