பிளஸ் 2 தேர்வில் 137 பேர் ஆப்சென்ட்
தேனி: மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 வணிகவியல், புவியியல் தேர்வில் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 137 பேர் ஆப்சென்ட் ஆகினர். மொத்தம் 43 மையங்களில் நடந்த வணிகவியல் தேர்வில் விண்ணப்பித்த 3974 மாணவர்களின், 3936 பேர் எழுதினர். 38 பேர் ஆப்சென்ட் ஆகினர். 558 தனித்தேர்வர்களில் 475 பேர் தேர்வெழுதினர். 83 பேர் ஆப்சென்ட் ஆகினர். மொத்தம் ஆப்சென்ட் எண்ணிக்கை 121. புவியியல் தேர்வில் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 854 பேரில் 838 பேர் தேர்வெழுதினர். 16 பேர் ஆப்சென்ட் ஆகினர். இரு தேர்வுகளிலும் சேர்ந்து மொத்தம் 137 பேர் ஆப்சென்ட் ஆகினர். முதன்மை கல்வி அலுவலர் வாசு தலைமையில் பறக்கும்படை அலுவலர்கள் தேர்வு மையங்களை கண்காணித்தனர்.