1000 பேருக்கு ஆசிரியர் பணி; கூடுதல் பணியிடங்கள் அறிவிப்பு
சென்னை: இடைநிலை ஆசிரியர் பணிக்கு கூடுதல் இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 1000 பணியிடங்கள் சேர்க்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.வரும் 21ம் தேதி தேர்வு நடக்க உள்ளது.