பொறுப்பேற்பு
மதுரை: மதுரை மாநகராட்சி கல்வி அலுவலராக (பொறுப்பு) ஆனையூர் அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் ரகுபதி பொறுப்பேற்றார். இங்கிருந்த மாரிமுத்து சிவகங்கை தொடக்க கல்வி அலுவலராக மாற்றப்பட்டார். அவருக்கு பதில் சருகுவலையபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை உமாமகேஸ்வரி நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற ஒரே நாளில் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றப்பட்டு, ரகுபதி மாநகராட்சி கல்வி அதிகாரியாக பொறுப்பேற்றார்.