உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அண்ணாமலைக்கு அமைச்சர் பதவியில்லை; கோவை மக்கள் ஏமாற்றம்!

அண்ணாமலைக்கு அமைச்சர் பதவியில்லை; கோவை மக்கள் ஏமாற்றம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை தொகுதியில் அண்ணாமலை தோல்வியடைந்தாலும், அவருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியுடன் அமைச்சர் பதவியும் தரப்படும் என்று, எதிர்பார்த்திருந்த கோவை மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, இந்தத் தொகுதிக்காக 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று தேர்தல் அறிக்கை கொடுத்திருந்தார். அது மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. முக்கியமாக, தொழில் அமைப்பினர், அண்ணாமலை வென்றால், கோவையில் பெரும் மாற்றம் நிகழும் என்று நம்பினர்.

எகிறிய எதிர்பார்ப்பு

அவர் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராவார்; விமான நிலைய விரிவாக்கம், கோவை சந்திப்பு மேம்பாடு, புதிய ரயில்கள், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதியுதவி, புதிய பை பாஸ் திட்டங்கள், பசுமை வழிச்சாலைகள், தொழில் மேம்பாட்டுக்கான பல திட்டங்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று கருதினர். அதன் அடிப்படையில், நேரடியாகவும், மறைமுகமாகவும் தங்கள் ஆதரவையும் தெரிவித்திருந்தனர்.ஆனால், கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று பலரும் நினைத்திருந்த அண்ணாமலை, தோல்வி அடைந்தார். இருப்பினும், தனிப்பட்ட முறையில் அவருக்கே, கோவை மக்களின் அதீத ஆதரவு கிடைத்திருப்பது உறுதியாகியுள்ளது.அவர் தோற்றாலும், மத்தியில் பா.ஜ., ஆட்சி தொடர்வதால், மத்திய அமைச்சரவையில் அண்ணாமலைக்கு இடம் தரப்படும்; அதை வைத்து, கோவைக்கான பல திட்டங்களை அவர் நிறைவேற்றுவார் என்று பலரும் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், அமைச்சரவை பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம் பெறவில்லை; இது கோவை மக்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தேர்தலில் தோல்வியடைந்ததால், அமைச்சர் பதவி வேண்டாமென்று அண்ணாமலையே கூறி விட்டதாகவும், மாநிலத் தலைவர் பதவியில் தொடர்வதையே அவர் விரும்புவதாகவும், கட்சி நிர்வாகிகள் தகவல் பகிர்கின்றனர்.

அண்ணாமலைக்கு பாராட்டு

அதற்கேற்ப, தேர்தல் தோல்விக்குப் பின் அவருடைய பதவி பறிக்கப்படும் என்று தகவல் பரவிய நிலையில், அண்ணாமலையை பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதனால் அவர் மாநிலத் தலைவர் பதவியில் தொடர்வது உறுதியாகியுள்ளது. அதே வேளையில், இப்போதும் பா.ஜ., ஆட்சி தொடர்வதால், செல்வாக்கைப் பயன்படுத்தி, கோவைக்குரிய திட்டங்களை நிறைவேற்ற, அண்ணாமலை முயற்சி எடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 'மாஜி' அமைச்சர் வேலுமணி, இதைப்பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.அதற்கேற்ப, தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி எடுப்பேன் என்று, அண்ணாமலையும் உறுதி அளித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு, இன்னும் இரு ஆண்டுகள் இருக்கும் நிலையில், அதற்குள் விமான நிலைய விரிவாக்கம், கோவை சந்திப்பு மேம்பாடு உள்ளிட்ட சில முக்கியத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், அந்தத் தேர்தலில் பா.ஜ., தனித்தே நின்றாலும், அமோக வெற்றி பெறும் என்பது நிச்சயம்.-நமது சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

பேசும் தமிழன்
ஜூன் 11, 2024 19:06

அவர் அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறி விட்டார்... தமிழக தலைவராக இருந்து.... இரண்டு திராவிட கட்சிகளின் தில்லுமுல்லுகளை வெளியே கொண்டு வர வேண்டும்.


nv
ஜூன் 11, 2024 18:18

தலை எழுத்து கோவை மக்களுக்கு.. விடியல் கிடையாது.. இப்படி ஒரு தலைவனை விட்டு கொடுத்து அவர்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டு கொண்டு விட்டார்கள்


அசோகன்
ஜூன் 11, 2024 16:59

திமுகவினர்....... இந்த லட்சணத்தில் ஜனநாயகத்தை பற்றி பாடம் வேறு......... அரக்கர்கள் கூட்டம்


Rajk
ஜூன் 11, 2024 16:51

பரம்பரை பரம்பரையாக வேட்பாளர் யார் என்று தெரியாமல் சின்னத்தை மட்டும் பார்த்து பொத்தானை அமுக்கும் மக்கள் ஒரு பக்கம். வேட்பாளர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் அதை பார்க்காமல் மதத்திற்காக மட்டுமே ஒட்டு போடும் சிறுபான்மையினர் ஒருபுறம், எவ்வளவு கேவலப்படுத்தினாலும் சொரணை இல்லாத பெரும்பான்மையினர் ஒருபுறம், காசை வீசி ஓட்டுக்களை வலைக்கும் ஆளும் அதிகார வர்க்கம், ஜெயிலில் இருந்து பழிவாங்க அதிகாரத்தை ஏவும் செபா ஒருபுறம், தொடர்ந்து கேவலமான மீம்ஸ் பரப்பும் கட்சிகளின் ஐடி விங்கள்,


தமிழ்
ஜூன் 11, 2024 16:01

இந்தக்கட்டுரை யாரையோ திருப்திப்படுத்தவே பிரசுரிக்கப்பட்டதுபோல் இருக்கிறது.


தமிழ்
ஜூன் 11, 2024 15:58

என்னப்பா புதுசு புதுசா ரீல் விடுறீங்க. மக்கள் அவரை விரும்பியிருந்தா அவருக்கே ஓட்டுப்போட்டு mp யாக தேர்ந்தெடுத்திருப்பார்கள்.


பச்சையப்பன் கோபால்புரம்
ஜூன் 11, 2024 12:39

அப்படியெல்லாம் யாருக்கும் வருத்தமில்ல உங்களைத் தவிர!!


N PALANISAMY
ஜூன் 11, 2024 12:20

ஒட்டுமொத்தமா போட்டு ஏனைய்யா உயிரை வாங்குறீங்க? நானும் கோவைக்காரன் தான், எனக்கொன்றும் ஏமாற்றம் இல்லையே...


Jai
ஜூன் 11, 2024 11:47

ஜனநாயகம் என்பது அனைவரும் ஒன்று கூடி இழுக்க வேண்டிய தேர். சிலர் இழுக்காமல் விட்டால் அந்த தேர் நகராது. கோயம்புத்தூர் தேர்தலில் அண்ணாமலை அவர்களுக்காக மற்ற கட்சியினர் காசு கொடுத்த பொழுதிலும் 4,50,000 பேர் அண்ணாமலைக்கு ஓட்டு போட்டனர். கோயம்புத்தூரில் ஜனநாயக தேர் நகர இன்னும் பலர் முயற்சித்து இருக்க வேண்டும். காசு வாங்கிக் கொள்ளாமல் அண்ணாமலைக்கு ஓட்டு போட்ட அனைவரும் இந்த ஜனநாயகத்தை உயர்த்தி நிறுத்துபவர்கள். வாக்காளர்களை காசு கொடுத்து வீழ்த்தி விடலாம் என்று ஆசைப்படும் அனைவருக்கும் பெரிய எச்சரிக்கையை கோயம்புத்தூர் வாக்காளர்கள் கொடுத்துள்ளனர். அடுத்த தேர்தலில் உங்களுடைய நேர்மையை சோதிக்கும் வகையில் காசுகளை பெருமளவில் அள்ளி வீசுவார்கள் அப்போதும் நீங்கள் இதேபோன்று உறுதியுடன் இருந்து நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்.


விஜய்
ஜூன் 11, 2024 11:23

அண்ணாமலை தோக்கடிச்சிட்டு எதுக்கு இந்த ஓலை முன்னாடியே யோசிக்கணும்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ