உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: உருது மொழியால் பிரச்னை!

டில்லி உஷ்ஷ்ஷ்: உருது மொழியால் பிரச்னை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தில், உருது மொழி ஒரு பிரச்னையை கிளப்பியுள்ளது. மறைந்த சிவசேனா தலைவர் பால் சாகிப் தாக்கரே தீவிர ஹிந்து; காங்கிரசை கடுமையாக எதிர்த்தவர். இவருடைய மகன் உத்தவ் தாக்கரே, பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகி, காங்., ஆதரவுடன் மஹாராஷ்டிரா முதல்வரானார்; பின், இவருடைய கட்சி இரண்டாக உடைந்தது.'ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அமைப்பு உண்மையான சிவசேனா' என, தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டது. தற்போது, ஏக்நாத் ஷிண்டே பா.ஜ., ஆதரவில் முதல்வராக உள்ளார். உத்தவ் தாக்கரே கட்சியினர், உருது மொழியில் ஒரு காலண்டர் அச்சடித்துள்ளனர்; அதில், ஜனாப் பால் தாக்கரே என, பாலா சாகிப் படத்தை போட்டுள்ளனர். இதை, தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ., தலைவரும், துணை முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ், 'இதை ஒரு போதும் பாலா சாகிப் ஒத்துக் கொள்ள மாட்டார்; இது, அவருக்கு உத்தவ் செய்த துரோகம்' என, அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.இதற்கு பதில் சொல்ல முடியாமல் தவித்த உத்தவ், 'இந்த காலண்டரை நான் அச்சடிக்க சொல்லவில்லை. கட்சியில் யாரோ செய்துள்ளனர்' என, மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும், பா.ஜ., இதை தீவிர பிரசாரமாக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sankaranarayanan
மே 19, 2024 21:06

அண்ணா ஹசாரே எங்கள் தலைவர் என்று கூறும் கேரி வாலு போலத்தான் எம் ஜி ஆறு எங்கள் தலைவர் என்று கூறும் திராவிட விடியல் அரசுபோலத்தான் காமராசர் கக்கன் எங்கள் தலைவர்கள் என்று கூறும் இப்போதுள்ள தமிழக காங்கிரசு தலைவர்கள்போலத்தான் சுபாஷ் சந்திரபோசு எங்கள் தலைவர் என்று கூறும் மமதையைப்போன்றுதான் அம்மாதான் எங்கள் தலைவி என்றுகூறும் இப்போதுள்ள அதிமுக போலத்தான் காலத்திற்கு ஏற்றவாறு அரசியல் தலைவர்கள் சொல்லும் மாறும் இதுதான் அரசியல்


Sridhar
மே 19, 2024 12:34

இதைவிட, வீர் சவார்க்கரை தங்கள் குரு, தலைவர் என்று சொல்லிக்கொண்டு, அவரை கேலி, கிண்டல் செய்யும் ராவுல் காந்தியிடம் மண்டியிட்டு நிற்கிறாரே இந்த உதவா, அது அவமானம் இல்லையா? பாஜாகா ஏன் இந்த விஷத்தை முன்னெடுத்து செல்லவில்லை?


மேலும் செய்திகள்











புதிய வீடியோ