உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 74 லட்சம் பேரின் தரவுகள் எங்கே? அதிர்ச்சியில் அமைப்பு சாரா தொழிலாளர்கள்

74 லட்சம் பேரின் தரவுகள் எங்கே? அதிர்ச்சியில் அமைப்பு சாரா தொழிலாளர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக அரசின் நல வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களின் குடும்பங்களுக்கு, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, வீடு கட்ட உதவி, இயற்கை மரண ஈமச்சடங்கு உதவி, பெண் தொழிலாளர்களுக்கு, 55 வயதில் ஓய்வூதியம் உள்ளிட்ட, பல்வேறு பலன்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக, நல வாரியங்களில் பதிவு செய்திருந்த, 74 லட்சம் தொழிலாளர்களின் தரவுகள் அழிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதம்: தொழிலாளர் நலத்துறையின் கீழ் உள்ள நல வாரியங்களில், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு, மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகங்கள் வாயிலாக, பல்வேறு பலன்கள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று காலத்தில், அ.தி.மு.க., அரசு, நல வாரிய பணிகள் அனைத்தையும், 'ஆன்லைன்' வாயிலாக செய்வது என்று தன்னிச்சையாக முடிவெடுத்தது. இதன் காரணமாக, 40 லட்சம் தொழிலாளர்களால், நல வாரியங்களுக்கான உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க முடியாமல் போய் விட்டது.அதோடு, 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்திருந்த, 74 லட்சம் தொழிலாளர்களின் தரவுகளும் ஆவணங்களும் அழிந்து விட்டதாக, தற்போது தொழிலாளர் நலத்துறை கூறுகிறது. இதையடுத்து, மீண்டும் ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய நிர்ப்பந்திக்கின்றனர். அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர் நலத்துறையின் ஆன்லைன் பதிவு மட்டும் அழிந்து விட்டதாக கூறுவது ஏற்புடையதல்ல. தொழிலாளர்களின் பதிவு தரவுகளை மீட்டெடுக்க, அரசும், தொழிலாளர் நலத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'சந்தேகம் எழுகிறது!'

முந்தைய அ.தி.மு.க., அரசு, தொழிலாளர்களின் தரவுகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணியை, தனியார் வசம் ஒப்படைத்திருந்தது. அந்நிறுவனம் தரவுகளை முறையாக பராமரிக்கவில்லை எனக்கூறி, தி.மு.க., அரசு, 'எல்காட்' வசம் ஒப்படைத்தது. ஆனால், தரவுகள் முழுமையாக கிடைக்கவில்லை என, அரசு நிறுவனமான எல்காட் கூறியதை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். அதையடுத்து, 10 சதவீத தரவுகள் மட்டுமே கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். நல வாரியங்கள் வாயிலாக தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பலன்களுக்கு, நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாத நிலையில், அதை மறைக்க, அரசு தரப்பு இதுபோன்ற காரணங்களை சொல்கிறதோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. - எஸ்.கண்ணன்,மாநில துணை பொதுச்செயலர், சி.ஐ.டி.யு.,***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அனுபமா
மே 22, 2024 05:51

தத்திகள்... கம்பியூட்டரில் வெச்சிருந்தாலும்.கண்டு பிடிச்சு அழிச்சிருவாங்க. இதிலே எத்தனை கோடி ரூவாய் எவென்லாம் ஆட்டையப்.போட்டானோ? வாரியம்னாலே, வாரி சுருட்டிக்கிறதுன்னு பொருளாயிடுச்சே கோவாலு.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி