உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க.,வில் 23; தி.மு.க.,வில் 14 விஜயகாந்த் ராசி வேலைக்காகுமா?

அ.தி.மு.க.,வில் 23; தி.மு.க.,வில் 14 விஜயகாந்த் ராசி வேலைக்காகுமா?

சென்னை: 'அ.தி.மு.க., கூட்டணியில் 23 சீட், தி.மு.க., கூட்டணியில் 14 சீட் கேட்டு, இரண்டு பக்கமும் கதவை திறந்து வைத்து, தே.மு.தி.க., காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள, தி.மு.க., தலைமை பணிகளை முடுக்கி விட்டு உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vralhul7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கூட்டணிக்குள் புது வரவாக, தே.மு.தி.க., மற்றும் பா..ம.க.,வை இழுக்க ரகசிய பேச்சு நடந்து வருகிறது. தி.மு.க., கூட்டணியில் இணைய வேண்டும் என்றால், 14 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் உறுதிப்படுத்த வேண்டும் என தே.மு.தி.க., நிபந்தனை விதித்துள்ளது. இதேபோல், அ.தி.மு.க., கூட்டணியில் இணைய வேண்டும் என்றால், 23 சட்டசபை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் தர வேண்டும் என, தே.மு.தி.க., பிடிவாதம் பிடிக்கிறது. தற்போதைய நிலையில், இரண்டு கூட்டணிக்கும் கதவை திறந்து வைத்து, தே.மு.தி.க., காத்திருக்கிறது. அதேநேரம் கூட்டணி அறிவிப்பை, ஜனவரி 9ல் கடலுாரில் நடக்கும் மாநாட்டில்தான் வெளியிடுவோம் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், தே.மு.தி.க., வந்தால் பார்ப்போம் என்ற மனநிலையில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தலைமைகள் உள்ளன.

இதுகுறித்து தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:

தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்திற்கு ராசி எண் ஐந்து. அதனால், பல தேர்தல்களில் கூட்டுத்தொகை ஐந்து வரும்படி, தொகுதிகளை பெற்று போட்டியிட்டார். தே.மு.தி.க., முதல்முறையாக அ.தி.மு.க.,வுடன், 2011 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது அக்கட்சிக்கு 41 சீட்கள் ஒதுக்கப்பட்டன.இதை தொடர்ந்து, 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து 14 தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டியிட்டது. அதேபோல், கூட்டுத்தொகை ஐந்து வரும்படி தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விடம் கேட்கப்பட்டுள்ளது. தி.மு.க., தரப்பில் கூட்டுத்தொகை கணக்கெல்லாம் இல்லாமல், நேரடியாக ஐந்து சீட் தருகிறோம் எனக் கூறியுள்ளனர். அ.தி.மு.க., கூட்டணியில் சீட் எவ்வளவு என்பதை சொல்லாமல், கூட்டணிக்கு அழைக்கின்றனர். இதனால், எந்த முடிவும் எடுக்காமல் கட்சி தலைமை காத்திருக்கிறது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Nalla Paiyan
ஜூலை 14, 2025 07:52

பேராசை பிடித்த பெண்மணி இவர்..... தமது தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு தனது குடும்பத்தினரை பதவியில் வைக்க ஆசைப்படுகிறார்.. இறுதியில் தோற்றுத்தான் போவார்....


மணி சேகரன்
ஜூலை 10, 2025 21:47

மக்களுக்கான நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்ற கொள்கைதான் அரசியல்வாதிகளுக்கான அடிப்படை இலக்கணம். ஆனால் இன்றைய நிலை :: ஆளும் கட்சிக்கு தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது கொள்கை. பெரிய எதிர்க்கட்சிக்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது கொள்கை. இதர கட்சிகளுக்கு யார் அதிகமான சீட் தருகிறார்களோ அவர்களுடன் சேர்ந்து கொள்வது என்பது கொள்கை. மக்களின் நலனுக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற கொள்கை கோட்பாடு என்பதெல்லாம் கிடையாது. 10 சீட் கொடுத்தால் இவருடன் கூட்டுப் போடத் தயார் 15 சீட் கொடுத்தால் இவருடைய எதிரியுடன் கூட்டு சேரத் தயார். ஆஹா மிக அருமையான பொது நலத் தொண்டர்கள்.


KR india
ஜூலை 10, 2025 20:02

எந்த கட்சி தான், பெரிய கட்சிகளுடன் பேரம் பேச வில்லை ? எனவே, இதை எல்லாம் ஒரு குறைபாடாக கருத வேண்டிய தேவை இல்லை. திரு.வாசன் போன்று, பா.ஜ.க போன்று, தமிழக அரசியலில், கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒரு Decent கட்சி தான் திருமதி. பிரேமலதா அவர்களின் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் தே.மு.தி.க. திருமதி.பிரேமலதா அவர்கள், மடை திறந்த வெள்ளம் போல், ஆட்சியாளர்கள் செய்யும் தவறை சுட்டிக் காட்டி பேசக் கூடிய வல்லமை படைத்தவர். தேசபக்தியும், தெய்வ பக்தியும் உள்ளவர். நாட்டிற்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்து தெய்வங்களுக்கு எதிராகவும் பேசி வரும், தி.மு.க வில் உள்ள, பிற சிறிய கட்சிகளை ஒப்பிடும் போது, பிரேமலதா அவர்களின் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் தே.மு.தி.க. கட்சி, என்பது, குன்றின் மேல் பிரகாசிக்கும் விளக்கு பாலைவனத்தில் பூத்திருக்கும் ரோஜா அவர் எந்த கட்சி கூட்டணியில் இணைந்தாலும், எங்கிருந்தாலும் வாழ்க வளர்க


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 10, 2025 20:51

பேரம் பேசுவது தப்பில்லை .ஆனால் தானே ஒரு பெருங்காய டப்பா என்பதை தெரிந்துகொண்டு 40சீட் கொடுப்பவர்களுடன் கூட்டணி 23 கொடுத்தால் கூட்டணி என்று சொல்வதுதான் சிரிப்பை வரவழைக்கிறது .அதுமட்டுமின்றி விஜயகாந்த்தை வசைபாடுவதற்காகவே மதுரை நடிகருக்கு சில சி க்கள் கொடுத்தவர்களுடன் கூட்டணி என்பது இவருக்கு விஜயகாந்த் மீது எந்த அளவுக்கு மரியாதை இருக்கிறது என்பதும் தெரிகிறது


Bhaskaran
ஜூலை 10, 2025 19:51

ஐந்தே அதிகம்.அண்ணிக்கு ஸ்வீட் பாக்ஸ் மட்டுமே முக்கியம்


Haja Kuthubdeen
ஜூலை 10, 2025 18:53

அடிப்படை அரசியல் தர்மமே இல்லாத கட்சி..திமுக..அஇஅதிமுக இரண்டுமே இந்த கட்சியை புறக்கனிக்கனும்.சதீசை எம் பி ஆக்கனும் என்பதே ஒரே குறிக்கோள்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 10, 2025 17:29

தனலட்சுமி சீனிவாசனை நம்புங்க அவரு உங்க காலேஜை வாங்கி கைநிறைய காசு கொடுத்தமாதிரி ஸ்டாலின்கிட்ட கூட்டிட்டுப்போயி வாய் நெறைய சீட்டும் மனசு நிறைய இடமும் போனசா ஒரு பொட்டியும் வாங்கித்தருவாரு.


krishnamurthy
ஜூலை 10, 2025 15:55

யாருமே சேர்க்காமல் இருக்கலாம்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 10, 2025 14:13

தனியா நின்னா 234லேயும் நிக்கலாம். 6 ராஜ்யசபா சீட்டும் கிடைக்குமில்லே.


SUBBU,MADURAI
ஜூலை 10, 2025 15:23

இந்த உலகில் பிரேமலதா போன்ற பேராசை பிடித்த பெண்ணை பார்க்க முடியாது


Oviya Vijay
ஜூலை 10, 2025 12:50

பிரேமலதா, அவரது தம்பி மற்றும் தம் இரு மகன்கள் அனைவரும் தங்களைத் தாங்களே முகஸ்துதி பாடும் கேப்டன் டிவி யை மட்டும் பார்க்காமல் மற்ற சமூக ஊடகங்களில் எவ்வாறேல்லாம் இவர்களைக் கழுவிக் கழுவி ஊற்றுவதையும் பார்க்க வேண்டும். உங்களால் தான் ஒரு நல்ல சிறந்த ஆட்சியை எங்களுக்குத் தரமுடியும் என்று மக்கள் ஏதோ இவர்களிடத்தில் கதறி அழுவதைப் போல் இவர்களாகவே கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒருவரும் இவர்களைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை என்பதை எப்போது தான் உணர்வார்களோ...


Oviya Vijay
ஜூலை 10, 2025 12:37

சட்டசபை தொகுதிகளில் தமது கட்சியால் தனித்தோ கூட்டணியுடனோ ஒரு சீட் கூட ஜெயிக்க இயலாது என்பது மட்டும் அவர்களின் உள்ளுணர்வுகளுக்கே நன்கு தெரியும்... அதனால் தான் யாரோடு கூட்டணி சேரினும் ராஜ்ய சபா சீட் மீது மட்டுமே அவர்களுக்கு முக்கியக் கண்... மிக மிக மிக நல்ல மனிதர் என்ற மதிப்பு மிக்க உயரிடத்தை தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்... ஆனால் அந்த அருமையான இடத்தை தமிழக மக்களின் மனங்களில் பெற அவரது குடும்பத்தினருக்கு மட்டும் ஏனோ தெரியவில்லை... கேப்டன் மட்டும் உயிரோடிருந்திருந்தால் பதவி ஆசை பிடித்து அலையும் அடங்காப் பிடாரியான தன் மனைவியின் செயல்களைக் கண்டு வெட்கித் தலைகுனிந்திருப்பார்... ஆனால் மக்கள் விஜயகாந்த் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் மரியாதை என்றென்றும் நிலைத்திருக்குமேயன்றி கடுகளவும் குறையாது... அந்த உரிமையை சிறிதும் சொந்தம் கொண்டாடத் தகுதியில்லாதவர்கள் அவரது குடும்பத்தினர்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை