உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / செங்கொடியை ரூ.25 கோடிக்கு அடகு வைத்த அறிவாலய வித்வான்; கம்யூ., முத்தரசன் மீது அ.தி.மு.க., தாக்கு

செங்கொடியை ரூ.25 கோடிக்கு அடகு வைத்த அறிவாலய வித்வான்; கம்யூ., முத்தரசன் மீது அ.தி.மு.க., தாக்கு

சென்னை: 'செங்கொடியை 25 கோடி ரூபாய்க்கு அடகு வைத்த, அறிவாலய வித்வான்' என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசனை, அ.தி.மு.க., மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.

இது குறித்து அ.தி.மு.க., வெளியிட்ட அறிக்கை:

இ.கம்யூ., மாநிலச் செயலர் முத்தரசன், அவர் சார்ந்த டெல்டா மாவட்ட விவசாயிகளின் வலியை உணராதவர். பயிர் காப்பீடு வழங்காதது பற்றி கூட, தி.மு.க., அரசை எதிர்த்து கேட்காமல், அடிமையாக இருக்கும் மவுனப் புரட்சியாளர். தி.மு.க., அரசைப் பற்றி, தப்பித் தவறி, ஒரு வார்த்தை கூட விமர்சித்து விடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பவர். தங்கள் இயக்கத்தின் கொள்கை வேர்களான தொழிற்சங்கங்கள் போராடினால் கூட, அசராமல், தி.மு.க.,வுக்கு முட்டு கொடுப்பவர். அறிவாலயத்தின் நிலைய வித்வான்களிலேயே, மிகச் சிறந்தவராக, தன்னைக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். அப்படிப்பட்ட முத்தரசன், காட்டிக் கொடுப்பதைப் பற்றி பேசுகிறார். திடீரென்று இப்படி பொங்குவதற்கு, அறிவாலயத்தில் ஏதேனும் சிறப்பு 'பேமன்ட்' உண்டோ? 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு' ஆன கதையாக, 'கம்யூனிஸ்ட் என்றால் என்ன' என மக்கள் கேட்கும் அளவிற்கு கட்சி, கொள்கையை தேயவிட்ட முத்தரசன் போன்றோர், தோழர் என்ற சொல்லுக்கே இழுக்கு. தி.மு.க.,விடம் 25 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு, கட்சியின் செங்கொடியை அடகு வைத்து, கம்யூனிஸத்தை காட்டிக் கொடுத்த கம்யூனிஸ்டுகளை, மக்களிடம் நாங்கள் காட்டிக் கொடுக்கிறோம். இ.கம்யூ., இடம்பெற்றுள்ள கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க., அரசின் உருட்டுகளையும், திருட்டுகளையும் மக்களிடம் இன்னும் காட்டிக் கொடுப்போம். தி.மு.க.,வையும், மக்களை ஏமாற்றும் அதன் துரோகக் கூட்டணியையும் தொடர்ந்து காட்டிக் கொடுப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Raajanna
ஆக 08, 2025 13:46

எடப்பாடியார் இன்னும் பழைய பஞ்சாங்கம் போல.


reghupathy umashankar
ஆக 07, 2025 22:51

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் புதிய மாநில செயலர் தோழர் பெ. சண்முகம் அவ்வப்போது தமிழக ஆட்சியாளர்களை இடித்துரைக்கத்தான் செய்கிறார். பாலகிருஷ்ணன் தான் தி.மு.க அரசுக்கு தீவிரமாக முட்டுக்கொடுத்தார். அலங்காநல்லூரில் 100 கோடி ரூபாய் செலவில் கருணாநிதி பெயரில் மாடு பிடிக்கும் அரங்கம் கட்டியதை சுட்டிக்காட்டி நலிவடைந்து மூடப்பட்ட அரசு சர்க்கரை ஆலைகளை சீரமைத்து இயக்கினால் விவசாயிகளும் பயனடைவர் உண் 500பேருக்காவது வேலைவாய்ப்பு கிடைக்கும். அதை விடுத்து ஆஃப்ரேன்டலி பெயரில் மாடு புடிக்கும் அரங்கம் வேண்டுமென்று யார் கேட்டது ? தனியார் சர்க்கரை ஆலைகள் பயனடையவேண்டும் என்பதற்காக அரசு ஆலைகளை சீரமைக்க மறுக்கிறார்கள் என தி.மு.க அரசை சாடியுள்ளார்.


என்னத்த சொல்ல
ஆக 07, 2025 22:42

EPS போனமாசம் வரை, கம்யூனிஸ்டுகளை கூட்டணிக்கு இழுக்க முயற்சித்தார். அது பலனளிக்காததால், இப்போ வாய்க்கு வந்தபடி பேசுகிறார். நல்லவாய் நாறவாயாக மாறிவிட்டது.


R K Raman
ஆக 07, 2025 20:54

கம்யூனிஸ்ட்கள் கட்டெறும்பு ஆகி பல காலம் ஆயாச்சு.‌‌.. சித்தாந்தம் எல்லாம் காற்றில் கரைந்து உலகில் எங்கும் இல்லை..‌ இந்தியாவில் கேரளா தவிர எங்கே உள்ளது? எதற்காக இரண்டு மட்டைகளும் இவர்களுக்கு இடம் கொடுக்க துடிக்கிறது?


R K Raman
ஆக 07, 2025 20:50

இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய.... என்று ஒரு பெரியவர் அன்று சொன்னார் என்பது தெரியாதா பாயண்ணா?


முருகன்
ஆக 07, 2025 19:49

அதை விட அதிகமாக கொடுக்க நீங்கள் முன் வந்தும் உங்களுடன் வர மறுக்கிறார்கள் என்றால் உங்கள் கட்சி நிலை அவ்வளவு மோசமாக உள்ளது என புரிந்து கொள்ளவும்


T.Senthilsigamani
ஆக 07, 2025 19:29

கம்யூனிஸ்ட்கள் இந்தியாவிலிருந்து துடைத்து எறியப்பட வேண்டும் . மதசார்பின்மை பேசி ராமாயணமும் ,மகாபாரதமும் பொய்மைகள் என பேசி பேசி சிறுபான்மை ஓட்டு பிச்சை வாங்கும் இவர்களை மக்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் .இந்தியாவின் சாபக்கேடு இந்த சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட்கள். தாலிபானிஸமும் ,கம்யூனிசமும் மக்களை முன்னேற்ற பாதையில் பயணித்திட உதவாது - சர்வாதிகார மனோநிலை கொண்ட கம்யூனிஸ்ட் கொள்கை அழியட்டும்


Kadaparai Mani
ஆக 07, 2025 17:59

EPS getting very high crowd in southern districts and why no front line media is properly covering in tamil nadu. The reality is common people moving towards EPS and AIADMK


Abdul Rahim
ஆக 07, 2025 17:22

அதிமுக கட்சியையே டெல்லி எஜமான் கிட்ட அடகு வச்ச அடிமை பேசலாமா ?


Kjp
ஆக 07, 2025 18:09

தேசப் பற்றுள்ள தமிழர்கள் யாரும் பேசலாம்.


guna
ஆக 07, 2025 18:39

என்ன ரஹீம் பாய்...அங்கே ராகுலுக்கு கருத்து போட்டுட்டு இங்கே அதிமுகவுக்கு கருத்து போடுறீங்க


Haja Kuthubdeen
ஆக 07, 2025 23:24

பாய்க்கு திமுக பிஜெபி அரசில் திமூக பங்கு வகித்ததும்..சட்டமன்றதுக்கு H.ராஜாவை அனுப்பி வைத்ததும் தெரியாது.


Sundar R
ஆக 07, 2025 15:16

எடப்பாடியார், கம்யூனிஸ்ட்கள் அறிவல்லாத்த ஆலயத்தின் வாசலில் அலுமினியத் தட்டை வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதை கண்டிக்கிறார். எடப்பாடியார், ஆளும் கூட்டணியில் இருக்கும் ஏனைய கட்சிகளையும், திமுகவுக்கு சொம்படிக்கும் டிவி சேனல்களையும், நாளிதழ்கள், வாராந்திர, மாதந்திர பத்திரிகைகளையும், திமுகவுக்கு பெருமளவில் ஓட்டு போடும் சில சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாத தெலுங்கு கட்சியான தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோத, கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சியான திமுகவுக்கு ஓட்டு போடுபவர்களையும் எடப்பாடியார் கடுமையாக சாடினால் தான் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, திமுக கொள்ளையர்கள் கைகளில் சிக்காமல் தமிழகம் காப்பாற்றப்படும்.


Abdul Rahim
ஆக 07, 2025 17:20

ஒரு கேசமும் புடுங்க முடியாது போ உனக்கு இங்கே பேட்டா 2 ரூவா மட்டும்தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை