உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழகத்தில் ஜனசேனா கட்சியை துவக்க ஆந்திரா பவன் கல்யாண் ஆலோசனை

தமிழகத்தில் ஜனசேனா கட்சியை துவக்க ஆந்திரா பவன் கல்யாண் ஆலோசனை

ஆந்திரா துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், தமிழகத்தில் தன் கட்சியை துவக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண், கடந்த 2014ல் ஆந்திர மாநிலத்தில் ஜனசேனா கட்சியை துவக்கினார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., தெலுங்குதேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கூட்டணி அரசில் பங்கேற்று, துணை முதல்வரானார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=62x5v3j5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அடுத்து, தமிழகத்தில் ஜனசேனா கட்சியை வளர்க்க பவன் கல்யாண் விரும்புகிறார். குறிப்பாக, தி.மு.க., எதிர்ப்பு அரசியலை, அவர் கையில் எடுத்துள்ளார். ஏற்கனவே துணை முதல்வர் உதயநிதி, சனாதனத்தை எதிர்த்து பேசியதை கடுமையாக கண்டித்தார். 'சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது; ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன். நீங்கள் தான் அழிந்து போவீர்கள்' என, தி.மு.க.,வினருக்கு சாபமிட்டார்.மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறார். 'தமிழக அரசியல்வாதிகள் தங்களின் திரைப்படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்ய கூறிவிட்டு, ஹிந்தியை எதிர்ப்பது ஏன்? ஹிந்தி தயாரிப்பாளர்கள் பணம் மட்டும் வேண்டும்; ஹிந்தி வேண்டாமா?' என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் தெலுங்கு பேசும் மக்களின் ஓட்டுகள் கணிசமாக உள்ளன. இங்கு கட்சியை விரிவுபடுத்தினால், அந்த ஓட்டு வங்கியை பெற முடியும். இது, கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்பது பவன் கல்யாண் கணக்காக உள்ளது. தமிழகத்தில் கட்சி துவக்குவது தொடர்பாக, தி.மு.க.,விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் தெலுங்கு சமுதாயத்தின் முக்கிய தலைவர்களிடம், பவன் கல்யாண் தரப்பினர் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

பங்கேற்கவில்லை

தொகுதி மறுவரையறை தொடர்பாக, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க, ஜனசேனா எம்.பி., உதய் ஸ்ரீனிவாசிற்கு தி.மு.க., அழைப்பு விடுத்தது. அதை ஏற்று, அவர் சென்னை வந்தார். அவரை, தி.மு.க., - எம்.பி., வில்சன் வரவேற்றார். நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார். பா.ஜ., கூட்டணியில் ஜனசேனா இருப்பதால், தி.மு.க., கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என, கூட்டம் நடப்பதற்கு முன்தினம் இரவில் உதய் ஸ்ரீனிவாசிற்கு பவன் கல்யாண் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் அக்கூட்டத்தில் பங்கேற்காமல் ஆந்திரா புறப்பட்டு சென்றார். ஆனால், அவர் பங்கேற்றதாக செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என, பவன் கல்யாணின் அரசியல் செயலர் ஹரிபிரசாத் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

சென்னையில் நடந்த தொகுதி மறுவரையறை குறித்த கூட்டத்தில் பங்கேற்க, ஜனசேனா கட்சிக்கு அழைப்பு வந்தது. அக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என, நாங்கள் தெரிவித்து விட்டோம். ஜனசேனா பங்கேற்றதாக வெளியான செய்திகள், யூகத்தின் அடிப்படையில் வெளியானவை. வெவ்வேறு கூட்டணிகளாக இருப்பதால், கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தொகுதி மறுவரையறை தொடர்பாக, எங்கள் கட்சியின் கொள்கையை அதிகாரப்பூர்வமாக மேடையில் வெளிப்படுத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

தேவராஜன்
மார் 25, 2025 19:29

இப்போதைய ஆஃபர் குவாட்டர், கோழி பிரியாணி, இரண்டாயிரம். பவண் தம்பி உங்க ஆஃபர் எவ்வளவு?


P. SRINIVASAN
மார் 25, 2025 15:29

இவருக்கு இருக்கிற மக்கள் பலத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், சீனா, பாக்கிஸ்தான் மற்றும் இலங்கையிலே கட்சி ஆரம்பிச்சு ஆட்சி பிடிக்கலாம்.


கோபாலன்
மார் 25, 2025 12:49

உளுத்து போன ஊழல் திராவிட மாடல் ஆட்சிக்கு மாறாக தேசிய சிந்தனை மிக்க நம்மை அடிமைப்படுத்திய வந்தேறிகளுக்கு கால் பிடிக்காத சிந்தனையாளர்கள் நம் நாட்டுக்கு தேவை


Narasimhan
மார் 25, 2025 12:36

இங்கிருக்கும் ஒரிஜினல் தெலுங்கர்கள் ஆதரவு அளிப்பார்கள்.


JAGADEESANRAJAMANI
மார் 25, 2025 11:53

தவறு கிடையாது. இங்கும் தெலுங்கு மக்களுள்ளார்கள். ஆன்மீகத்திற்கு நல்லது.


venugopal s
மார் 25, 2025 11:48

உள்ளூர் சந்தையிலேயே விலை போகாத மாடு வெளியூர் சந்தைக்கு வந்தா விலை போகப் போகிறது?


Srinivasan Krishnamoorthy
மார் 25, 2025 22:37

he is deputy CM of Andhra. how do you say he is not won, he is more powerful than udava nidhi


கொங்கு தமிழன் பிரசாந்த்
மார் 25, 2025 10:00

, பவன் கல்யாண் கட்சி ஆரம்பிச்சா எங்களுக்கு என்ன?


vijai hindu
மார் 25, 2025 11:58

திமுகவுக்கு தான் சொம்பு தூக்கு வாங்க என்ன சார் கரெக்டா


பாமரன்
மார் 25, 2025 09:02

வாங்கப்பூ... எங்கூர்ல எல்லா கட்சியும் இருக்கு... அட எங்க தெருவில் மட்டும் தான் மாயாவதி கட்சி ப்ராஞ்ச் இருக்குன்னு பெருமை பட்டேன்... அப்பாலிக்கா பார்த்தா இன்னொருத்தர் கூட இருந்திருக்கார்.. பாவம் அவரையும் போட்டு தள்ளிட்டாங்க...கொஞ்ச நாள் கொண்டாடிட்டு இப்ப மறந்துட்டீங்களே அந்த கேஸ் தான் பகோடாஸ் .


அப்பாவி நாயுடு, சூலுர்பேட்டா
மார் 25, 2025 08:10

ஓட்டுக்கி டப்பு இஸ்தாவா நைநா? லேதண்ட்டே ராவத்து.


VENKATASUBRAMANIAN
மார் 25, 2025 07:26

இனிமேல் உபிஸ் வேலை நடக்காது. திராவிட மாடல் எடுபடாது.


சமீபத்திய செய்தி