வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அரசியல் ரீதியாக அண்ணாமலையோடு பல வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு விவசாயியாக அவரை பார்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் இன்று வெளிநாட்டில் இருந்தாலும் பள்ளி கல்லூரி காலங்களில் படித்துக்கொண்டே அம்மாவுக்கு துணையாக பால்மாடுகள் வளர்ப்பதில் ஈடுபட்டிருக்கிறேன் பின்பு நானே தனியாகவும் கறவை மாடுகளை வைத்து பால் பண்ணை தொழில் பார்த்திருக்கிறேன் புறா கோழி,கிண்ணி கோழி, வாத்து, வான்கோழி என நான் அனைத்தையும் வளர்த்திருக்கிறேன் இடையில் ஏற்பட்ட சில பொருளாதார நஷ்ட்டம் கைதூக்கிவிட ஆள் இல்லாத காரணம் போன்றவற்றால் அவற்றை எல்லாம் விட்டு விலக வேண்டிய நிலை, என்னதான் படித்து விட்டு வெளிநாட்டில் வேலையில் இருந்தாலும் சொந்த ஊரில் பிடித்த தொழிலை செய்வது மனதுக்கு நிறைவானது அந்த வகையில் காவல்துறையில் பணி பின்பு அரசியல்வாதி என இருந்தாலும் பழையதை மறக்காமல் அண்ணாமலை செய்யும் இந்த பால்பண்ணை தொழில் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
இங்கு கருத்து எழுதுபவர்களின் எத்தனை பேருக்கு விவசாயம் பற்றி தெரியும்? எத்தனை பேர் விவசாயம் செய்து கொண்டு இருக்கிறார்கள் ?
இயற்க்கை விவசாயமா? அதில் துளியும் கூட லாபம் இருக்காது. இது தான் உண்மை. கள்ள பணம் இருந்தால் அதை வெள்ளை பணம் ஆக்கலாம்
தமிழகம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்
முழுக்க இயற்கை விவசாயத்துக்கு மாறினால் நாட்டிலுள்ள 140 கோடி பேருக்கும் உணவு உற்பத்தி சாத்தியமேயில்லை. ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான் கிடைக்கும். இயற்கை முறையில் விளைவித்த அரிசி கிலோ நூறு ரூபாய்க்கு மேல். சிறு தானியங்கள் விலை அதற்கும் மேல். நிலவளத்தை பாதிக்காத விஞ்ஞானமுறை விவசாயம் மட்டுமே தீர்வு.
அரசியலை விட்டு தலைவர் ஒதுங்கி கொள்ள முடிவு எடுத்து விட்டார் போல் தெரிகிறது!
எங்களுக்கு கட்சி, நாட்டு முன்னேற்றம் முக்கியமல்ல, நாட்டை கெடுக்கும் இம்சை அரசர்கள் உள்ள கட்சிக்கு ஆதரவு அளிப்போம்... நாடு முன்னேறுவது எங்களுக்கு பிடிக்காது...அவ்வளவுதேன்...
உங்கள் கட்சி மாமன்னர்கள் மாதிரி ஊரை கொள்ளை அடித்து சொத்து சேக்கவில்லை, நீங்கள் எல்லாம் திருத்தவே திருத்த மாட்டிர்கள். உங்கள் டிசைன் அப்படி.
சத்தியம் நீயே தருமத் தாயே குழந்தை வடிவே தெய்வ மகளே!
அவர் உழைத்து வேலை செய்வதை கிண்டலாக பேசுவார்கள் அவர்கள். திமுகவினருக்கு கடுமையாக உழைக்க தெரியாது. ஆனால் கண்டிப்பாக ஊழல் நன்றாக செய்யத்தெரியும்.
ரசாயன விவசாயத்தால் பாரத நாட்டு விவசாய நிலங்கள் - பாறாங்கல் போலவும், பாலைவனமாகவும் மாறிக்கொண்டு வருகின்றன. இன்னும் 50 ஆண்டுகளில் உணவுப்பற்றாக்குறையும், ரசாயனம் கலந்த உணவும் சேர்ந்து பாரதத்தில் பேரிடர் உருவாக்கும் இப்போதே பாரத அரசு ரசாயன விவசாயத்தை தடை செய்து -பள்ளி கல்லூரிகளில் இயறக்கை விவசாயம் theory + practical கற்பிக்க ஆரம்பிக்கவேண்டும் சிக்கிம் இதற்க்கு ஒரு வெற்றிகரமான முன்னுதாரணம்
சிக்கிம் முன்னுதாரணம். அதுக்கு காரணமானவரை தேசத்துரோக சட்டத்தில் கைது செய்து வைத்துள்ள பாஜக அரசிடம் இதை கேக்குறீர் கொடுமை.
திடீரென இயற்கை விவசாயத்தை கட்டாயப்படுத்தியதால் இலங்கைக்கு நேர்ந்த கதியை அறிந்தால் இப்படியெல்லாம் எழுத மனம் வராது.