உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உதயநிதி நிகழ்ச்சியில் பிக் பாக்கெட் ஆசாமிகள் கைவரிசை; பணத்தை இழந்த தி.மு.க.,வினர் அதிர்ச்சி

உதயநிதி நிகழ்ச்சியில் பிக் பாக்கெட் ஆசாமிகள் கைவரிசை; பணத்தை இழந்த தி.மு.க.,வினர் அதிர்ச்சி

கோவை; தமிழக துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சிகளில், கூட்டத்தை பயன்படுத்தி, பிக் பாக்கெட் ஆசாமிகள் கைவரிசை காட்டியதால், பணத்தை இழந்த தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்தனர்.தமிழக துணை முதல்வர் உதயநிதி, நேற்று முன்தினம் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்த அவருக்கு, விமான நிலையத்தில் இருந்து தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர். நிர்வாகிகள் பலரும் பொன்னாடை மற்றும் புத்தகங்கள் வழங்கவும், மனு கொடுக்கவும் முயற்சித்தனர்.கட்சியினரோடு, பிக் பாக்கெட் ஆசாமிகளும் நின்றிருக்கின்றனர். அதை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கண்காணிக்கத் தவறி விட்டனர். துணை முதல்வரை வரவேற்கவும், அவருக்கு கை குலுக்கவும், பொன்னாடை அணிவிக்கவும் கட்சியினர் முயற்சித்தபோது, அவர்களது பாக்கெட்டில் இருந்த பணத்தை, பிக் பாக்கெட் ஆசாமிகள் திருடி விட்டனர். இவ்வகையில், விமான நிலையம் வழித்தடத்தில் மட்டும், 57 ஆயிரம் ரூபாயை கட்சியினர் இழந்திருக்கின்றனர்.பணத்தை திருடியதாக சந்தேகப்பட்ட இருவரை பிடித்து, தர்ம அடி கொடுத்து, பீளமேடு புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களது மொபைல் போனும் போலீசாரிடம் வழங்கப்பட்டது. போலீசார் விசாரித்ததில், ஒருவர் மட்டுமே பிக்பாக்கெட் ஆசாமி என்பதும், இன்னொருவர் வேடிக்கை பார்க்க வந்தவர் என்பதும் தெரியவந்தது. பிக்பாக்கெட் ஆசாமியிடம் விசாரித்தபோது, திருடிய பணத்தை உடனுக்குடன் கை மாற்றி, வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டதாக கூறியிருக்கிறார்.இதேபோல், வ.உ.சி., மைதானத்தில் எம்.பி., அலுவலகம் திறப்பு விழாவுக்கு உதயநிதி வந்திருந்த சமயத்தில், மனு கொடுக்க கட்சியினர் திரண்டு நின்றிருந்தனர். அக்கூட்டத்திலும் பிக் பாக்கெட் ஆசாமிகள் புகுந்து கைவரிசை காட்டியிருக்கின்றனர். ஒருவரிடம் மட்டும், 17 ஆயிரத்து, 500 ரூபாய் திருடப்பட்டிருக்கிறது. இது, தி.மு.க., நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணை முதல்வர் வருகை பாதுகாப்பில், மாநகர போலீசார் அலட்சியமாக செயல்பட்டு இருப்பதை இவ்விரு சம்பவங்களும் காட்டுகிறது.போலீசார் கூறுகையில், 'வெளிமாவட்டத்தை சேர்ந்த பிக் பாக்கெட் ஆசாமிகள் ஊடுருவியிருக்கின்றனர். அவர்களது 'ரூட் லிங்க்' விசாரித்து வருகிறோம். அக்கும்பல், அரசியல் கட்சி தலைவர்கள் வரும் பகுதிக்குச் சென்று, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பிக் பாக்கெட் அடிப்பதை தொழிலாக வைத்திருக்கின்றனர். திருடும் தொகையை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் அனைவரையும் விரைவில் பிடிப்போம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

ஆரூர் ரங்
டிச 20, 2024 21:31

ஓவியா , வைகுண்ட் போன்ற 200s இழந்தாலும் வெளியில் சொல்ல முடியாது.


ஆரூர் ரங்
டிச 20, 2024 21:29

யார்யாரிடம் தப்பான வழியில் சம்பாதித்த பணமிருக்கும் என்பதை,? பாம்பின் கால் பாம்பறியும்.


அநமதேயம்
டிச 20, 2024 18:47

இது அவர்கள் கட்சியின் குலத்தொழில்.


Balasubramanian
டிச 20, 2024 17:31

எத்தனுக்கு எத்தன் கள்ளனுக்கு கள்ளன் - உலகில் இது சகஜம்


சுலைமான்
டிச 20, 2024 17:11

கலைஞர் சாகவில்லை.... இன்னும் நம்மோடுதான் இருக்கிறார்....


theruvasagan
டிச 20, 2024 16:56

ஒரு தொழிலை செய்பவன் தன்னைப் போல இருக்கும் இன்னொருத்தனிடம் தன் வேலையைக் காட்டமாட்டான். அதுதான் தொழில் தர்மம். அது ஏன் இங்கே இல்லாமல் போய்விட்டது என்பதுதான் புரியவில்லை.


Nandakumar Naidu.
டிச 20, 2024 13:58

திமுக கட்சியே அது தானே?


ராமகிருஷ்ணன்
டிச 20, 2024 13:43

பிக்பாக்கெட் பறி கொடுத்தவர்கள் ஏன் அதிர்ச்சி அடையனும். தன்னை விட பெரிய களவாணிகள் கட்சியில் இருக்கிறார்கள் என்று தெரியாதா


கல்யாணராமன்
டிச 20, 2024 13:07

திமுகவின் கூட்ட அரங்கில் ஆங்காங்கே "திருடர்கள், ஜேப்பிடிகாரர்கள் ஜாக்கிரதை"என்று விளம்பரம் வைக்க வேண்டும்.


lana
டிச 20, 2024 12:20

16 கோடி ஊவா பாலம் போய் விட்டது. அதுக்கே மக்கள் கவலை படாமல் இருக்கும் போது இது கட்சியின் demo


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை