உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பா.ஜ.,வினரிடம் எழுச்சி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பா.ஜ.,வினரிடம் எழுச்சி

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்னையில் தடையை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பா.ஜ.,வினரிடையே புதிய உற்சாகமும், எழுச்சியும் தொற்றிக் கொண்டுள்ளது.திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்னையில், ஆடு, கோழி பலியிடச் சென்றபோது போலீசார் தடுக்க, தொடர்ந்து படிமீது அமர்ந்து அசைவ பிரியாணி உண்பது என பிரச்னை வளர்ந்தது. இதையடுத்து திருப்பரங்குன்றத்தில் ஹிந்து முன்னணியினர் பிப். 4 மதியம் 3:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததும், அதற்கு அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்கவும் நேர்ந்தது. தங்கள் முயற்சிக்கு அரசு முட்டுக்கட்டை போடுவதாகக் கருதிய ஹிந்து முன்னணியினர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

தாக்கம்

முடிவு எப்படி வந்தாலும் 144 தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற முடிவோடு இருந்தனர். அவர்களுக்கு பா.ஜ., மற்றும் ஹிந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. ஹிந்து அமைப்பினர், மதுரை மட்டுமின்றி திண்டுக்கல், தஞ்சை, திருநெல்வேலி, திருச்சி, கோவை, திருப்பூர் உட்பட பிற மாவட்டங்களிலும் இப்பிரச்னையை கையிலெடுத்து பிரசாரம் செய்தனர்.அதேசமயம் தைப்பூசத் திருவிழா நேரத்தில் இப்பிரச்னை வெடித்ததால், திருப்பரங்குன்றம் வர ஏற்கனவே முடிவெடுத்த முருக பக்தர்களிடமும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

குவிந்தது கூட்டம்

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில், இவ்வழக்கில் நேற்று முன்தினம் மதியம் தீர்ப்பளித்த நீதிபதிகள், சில நிபந்தனைகளுடன், மதுரை பழங்காநத்தத்தில் மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என அறிவித்தனர். இதை வெற்றியாகக் கருதிய பா.ஜ., உள்ளிட்ட அமைப்புகள், ஒரு மணி நேரத்தில் அங்கு பெரிய அளவில் திரண்டனர். போலீசார் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், பிப்., 3 இரவில் தமிழகம் முழுதும் பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், துணைத் தலைவர்கள் சதீஷ்குமார், ராஜ்குமார், மண்டல தலைவர் கிருஷ்ணகுமார் உட்பட பல நிர்வாகிகளை கைது செய்து விராட்டிப்பத்து மண்டபத்தில் அடைத்தனர். மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம் கூறுகையில், ''மாடியில் இருந்த எங்கள் வீட்டின் பின்புறக் கதவை நள்ளிரவில் தட்டி என்னை எழுப்பினர். உதவி கமிஷனரை பார்த்து விடுங்கள். மீண்டும் வீட்டில் விட்டுவிடுகிறோம்' என்று உடை மாற்றவும் அனுமதிக்காமல் கைலியுடன் அழைத்துச் சென்றனர்.''ஆனால் மண்டபத்தில் அடைத்து வைத்து மனித உரிமையை மீறினர். இதனால் போலீசார் மீது வழக்கு தொடரலாம் என்றிருக்கிறேன்,'' என்றார். அதேசமயம் மாநில பொதுச்செயலர் சீனிவாசன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைப் பொதுச்செயலர் விஷ்ணுபிரசாத் உட்பட பலரை வீட்டுக்காவலில் வைத்தனர். நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அவர்களை விடுவித்தனர். இரவில் இப்படி நிர்வாகிகளை கைது செய்தது, பா.ஜ.,வினரிடையே வேகத்தை ஏற்படுத்தி விட்டது.லோக்சபா தேர்தலில் மதுரை தொகுதியில் பா.ஜ., தனித்துப் போட்டியிட்டு, 2ம் இடம் பெற்றிருந்த நிலையில், தற்போது போலீசாரின் கெடுபிடியால் பா.ஜ.,வினரிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறும் கட்சியினர், ஆர்ப்பாட்டத்திற்கு திரண்ட கூட்டத்தை உளவுப்பிரிவும் கணிக்கத் தவறிவிட்டதாக, பா.ஜ.,வினர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

V வைகுண்டேஸ்வரன்
பிப் 06, 2025 22:59

உங்களுக்கிடையில் நிலவும் ஒற்றுமையைக் குலைக்க இப்போ மட்டும் உங்களை இந்துக்கள் என்கிறார்கள். போன வாரம் வரை என்ன சொன்னே?? பாஜக வுக்காக, வெய்யிலில் காய்ந்து போலீசாரிடம் அடி உதை பட வேண்டுமென்றால் நீங்கள் இந்துக்கள். மற்ற சமயங்களில் திருட்டு திராவிடர்கள்.


Haja Kuthubdeen
பிப் 06, 2025 18:14

நம்பிட்டோம்


Arunkumar,Ramnad
பிப் 06, 2025 19:50

நம்பு அல்லது நம்பாமல் போ அதுவல்ல பிரச்சனை இங்கிருக்கும் வரை வாலை சுருட்டிக் கொண்டு அடங்கி இருக்கணும் புரியுதா?


venugopal s
பிப் 06, 2025 17:50

அவர்களுக்கு எழுச்சி வந்து விட்டதாம், நம்பி விட்டோம். ஏதோ திண்ணையில் அமர்ந்து ஊர் வம்பு பேசிக்கொண்டு வெறும் வாயை மென்று கொண்டு இருந்தவர்களுக்கு அவல் கிடைத்து விட்டது. இதை வைத்தே நான்கைந்து நாட்கள் ஓட்டி விடுவார்கள்!


பேசும் தமிழன்
பிப் 06, 2025 19:37

தமிழர்கள்..... குறிப்பாக இந்துக்கள் விழித்து கொண்டு விட்டார்கள்.... இனிமேல் உங்கள் பொய்யும்..... புரட்டும் எடுபடாது..... தமிழர்கள் வேறு திராவிடர்கள் வேறு என்பதை தமிழர்கள் உணர தொடங்கி விட்டார்கள்.


சாமிநாதன்,மன்னார்குடி
பிப் 06, 2025 19:51

ஏலே வேணு இந்து மதத்தில் உமக்கு நம்பிக்கை இல்லை என்றால் வேறு ஏதாவது பேரை வைத்து கொள். ஊரை ஏமாற்ற ஏன் இந்து அடையாளத்தோடு சுற்றுகிறாய்.


பாரதி
பிப் 06, 2025 17:13

"இந்துக்களுடன் சேர்ந்து வாழ முடியாது" - என்று சொல்லி தான் முஸ்லிம்களின் ஜனத்தொகை சதவிகிதத்தின் அடிப்படையில் நாட்டை பிரித்து வாங்கிக் கொண்டார்கள். அதற்குப் பிறகும் இங்கு என்ன வேலை? இதைக் கேட்க அறிவு யாருக்குமே இல்லை? இது என்னங்கடா குருட்டு நீதி?


Nallavan
பிப் 06, 2025 11:43

இந்துக்கள் புலால் உண்ண கூடாதா? கடவுளுக்கு வைத்து படைபவர்களும் இங்கு இருக்கிறார்கள், இதை வைத்து அரசியல் செய்து பார்க்க முயற்சி செய்கிறார்கள், பலிக்காது


ஆரூர் ரங்
பிப் 06, 2025 12:52

விரதமிருந்துதான் பாதயாத்திரையாக முருகன் ஆலயங்களுக்கு செல்வது காலங்காலமாக பின்பற்றப்படும் வழக்கம். ஐதீகம். மிருகபலி கொடுத்து வணங்கும் ஆலயங்கள் அவையல்ல.


rameshkumar natarajan
பிப் 06, 2025 11:22

I am really surprised about this news and the comments of fellow readers. Firts, we should understand that for many ages , majority of hindus were not allowed inside the temples. Who broke that embargo and took all of us inside the temples. Dravidian movement. If dravidian movement was not there many suppressed hindus wouldnt have had worshipped many temples in Tamil Nadu. So, guys try to understand that, dravidian move made liberization and will continue that.


ஆரூர் ரங்
பிப் 06, 2025 12:56

பொய். தமிழகத்தில் எங்குமே திராவிட கட்சிகள் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தியதில்லை.. முதன்முதலாக நடத்தியவர் வைத்தியநாத ஐயரும் முத்துராமலிங்கத் தேவரும். அனைவருக்கும் ஆலய நுழைவு உரிமைச் சட்டத்தை அமல்படுத்திய முதல்வர் ராஜாஜி. ஆனால் அப்போதே ஸ்டிக்கர் ஒட்ட துவங்கியது திராவிஷ ஆட்கள்.


guna
பிப் 06, 2025 14:29

you live in kochi under communists rule....please focus on your side...many temples in Kerala losing its fame by changing procedures...don't bluff


Karthik
பிப் 06, 2025 08:37

விரைவில் முடிவு வரும்.. அது விடியாலுக்கு முடிவு.


VENKATASUBRAMANIAN
பிப் 06, 2025 08:06

இதன்மூலம் திமுகவை அம்பலப்படுத்த வேண்டும். அப்போதுதான் பாஜக மேலே வரமுடியும். இதை இஸ்லாமியர் மூலம் செய்ய வேண்டும்


kantharvan
பிப் 06, 2025 16:44

டேய் நீ பழனிக்கே பாத யாத்திரை போனாலும் ஒரு இன்ச் கூட முன்னேற முடியாது.


கிஜன்
பிப் 06, 2025 07:50

ஏகடியம் செய்பவர்கள் ....செய்யலாம் .... ஆனால் தமிழகத்தில் முருகன் கோவில்கள் மீது கை வைப்பது .... மிக சிக்கலானது ... மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் ... கலைஞரே ...ஒரு முன்னாள் அமைச்சருக்கு எதிராக வேலெடுத்து .....சுப்பிரமணிய பிள்ளை வழக்கில் நெல்லையிலிருந்து செந்தூர் வரை நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொண்டார் .... நம்பர் 2 வாக வளம் கொழித்த அந்த அமைச்சர் ..... அரசியலில் என்ன ஆனார் என்பது வரலாறு .... ஆட்சியாளர்களுக்கும் ஆடுபவர்களுக்கும் புரியவேண்டும்...


பேசும் தமிழன்
பிப் 06, 2025 07:49

அன்று சென்னிமலை.... இன்று திருப்பரங்குன்றம்.... இந்து மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி தமிழகம் முழுவதும் பரவ வேண்டும்.... அதன் மூலம் இந்த விடியாத அரசு மற்றும் அதன் அல்லக்கை கட்சிகள் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்..... இந்துக்களிடம் ஒற்றுமை ஏற்பட்டுள்ளதை உடைக்க..... ஏதாவது ஜாதி என்று பிரச்சினையை தூண்டி விடுவார்கள்..... இந்துக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை