உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  எம்.எல்.ஏ.,க்களுக்கு அரசு கார் வழங்கலாமா?

 எம்.எல்.ஏ.,க்களுக்கு அரசு கார் வழங்கலாமா?

எம். எல்.ஏ.,க்களுக்கும் கார் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. சர்ச்சையாகி உள்ள இந்த அறிவிப்பு குறித்து, கோவை மக்கள் என்ன சொல்கின்றனர்?

பொதுப்பணித்துறை செய்யணும்

அரசு நிதியில் கார் கொடுப்பது தேவையற்றது; வங்கி கடன் வாங்கி தரலாம். அரசு கார் என்றால் எம்.எல்.ஏ. பதவி முடிந்ததும் காரை அரசிடம் ஒப்படைத்து விட வேண்டும். பராமரிப்பு செலவாக நிதி வழங்காமல், கார் பராமரிப்பு வேலைகளை அரசு துறைகளே கவனிக்கலாம். போக்குவரத்து துறை மூலமாக செய்ய முடியும். உதவியாளர் நிதியும் ஒதுக்க வேண்டியதில்லை. -தண்டபாணி, சுங்கம்

கடன்சுமை அதிகரிக்கும்

10 லட்சம் கோடி கடன் சுமை உள்ளதால், நிதி ஆதாரத்தை சரி செய்த பிறகு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றனர். இப்போது எம்.எல்.ஏ.க்களுக்கு கார் உள்ளிட்ட சலுகைகள் அறிவித்துள்ளனர். ஒரு மாதத்தில் நிதி நிலை சரியாகி விட்டதா. கடன் அதிகரித்து, மக்கள் வரிப்பணம் தான் வீணாகும். லட்ச ரூபாய் சம்பளம் வாங்குபவரால் கார் வாங்க முடியாதா? -- ராஜ்குமார், சிங்காநல்லுார்

வங்கிக்கடனில் வாங்கலாம்

எம்.எல்.ஏக்கள் மாதம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள். சம்பளம் தவிர இதர படிகள் என்று செல்லும் இடமெல்லாம் சலுகை வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கார் கொடுப்பது அவசியமற்றது. சம்பள ஆவணங்களை காட்டி வங்கியில் கடன் பெற்று, கடன் அடைக்கும் வகையில் கார் வாங்க ஏற்பாடு செய்யலாம். அப்போதுதான் சாமானிய மக்களின் சுமை தெரியும். -சுப்ரமணியம், இடையர்பாளையம்

சிக்கன நடவடிக்கை அவசியம்

தமிழகம் ரூ.10 லட்சம் கோடி கடனில் இருக்கிறது என சொல்லும் அரசு, சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டாமா? அரசு மட்டுமல்லாமல், அனைவரும் சிக்கனத்தை கடைபிடிப்பது அவசியம். வறுமை நிலையில் கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து; 5 அல்லது 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு அரசு சார்பில், எலெக்ட்ரிக் சைக்கிள் வழங்க திட்டமிடலாம். --கணேசன், வடவள்ளி

நல்ல விஷயம் தான்

எம்.எல்.ஏ. என்றால் பல இடங்களுக்கு சென்று பிரச்னைகளை ஆராயவேண்டும். மக்களை சந்திக்க வேண்டும். கார், உதவியாளர் ஊதியம் என்று வசதிகளை செய்து கொடுத்தால், புதிதாக வந்தவர்கள் ஊழல் செய்ய மாட்டார்கள். ஆனால், அரசு வாகனமாக கொடுக்காமல், வட்டி இல்லா கடனாக கொடுத்து, பெட்ரோல் அலவன்ஸ் ஒதுக்கி இருக்கலாம். -ஜெகன்னாத், ஈச்சனாரி

இல்லாதவருக்கு கொடுக்கலாம்

எல்லா எம்.எல்.ஏ.களுக்கும் கார் கொடுக்க அவசியமில்லை. யார் யாருக்கு கார் வாங்க வசதி இல்லையோ அவர்களுக்கு கொடுக்கலாம். த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் புதியவர்கள். பதவி சுகம் பார்க்காதவர்கள். அவர்களை ஆடம்பர வாழ்க்கைக்கு தள்ளிவிடக் கூடாது. கார் இல்லாதவர்களுக்கு மட்டும் கொடுத்தால், அரசு மீது விமர்சனம் வராது. -தர்மராஜ், கரடிமடை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

PATTALI
ஆக 22, 2026 18:11

சிறிய வசதிகளை கொடுத்து, 1000 கோடி, 2000 கோடி போன்ற பெரிய அளவிலான திராவிட மாடல் ஊழலை மீண்டும் செய்யாமல் தடுக்க வாய்ப்பிருக்கிறது. ஊழலுக்கான வழிகளை கட்டுப்படுத்த இதுபோன்ற வசதிகளை கொடுப்பது சரியானமுடிவு, ஊழலுக்கான சாக்குபோக்கு காரணங்களை குறைக்க கண்டிப்பாக இதுபோன்ற வசதிகள் உதவும். மேலும் ஒரு சட்டமன்ற தொகுதி முழுக்க சுற்றிவர கண்டிப்பாக வாகனம் வேண்டும்.


Sri Kumaran
ஆக 22, 2026 16:02

237×1500000=355500000÷10000=35550 35550 விவசாயிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் கூட விவசாயியாவது இந்த இக்கட்டான நிலையில் தங்களுடைய வாழ்வாதாரத்தை பேணி பாதுகாப்பார்


கூறமுதலீ
ஆக 22, 2026 15:21

என்னஇப்படி பீத்திக்கிறீங்க தமிழ்நாட்டுல காவிரியில் தண்ணியே இல்ல அதுக்கு ஒரு வியாக்கியானமும் காணோம் சும்மா எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும் சட்டசபையில் அவனை மாத்தி இவன் இவன மாத்தி அவன் கழுவி கழுவி ஊத்துறாங்க தயவுசெய்து தமிழ்நாட்டு விவசாயிகள கொஞ்சம் பாருங்க


R SRINIVASAN
ஆக 22, 2026 15:19

திமுக மற்றும் அதிமுக mla களுக்கு கார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் சொந்த செலவில் எல்லா mla களுக்கே வாங்கி கொடுக்கும் வசதி படைத்தவர்கள்


Raj
ஆக 22, 2026 13:42

MLAs சம்பளம் வாங்குகிறார்கள் , பேங்க் லோனில் கார் வாங்கலாம். அரசு மக்களின் வரிப்பணத்தை வீணாக்க வேண்டாம்.


Balaji Radhakrishnan
ஆக 22, 2026 12:43

முதலில் மக்களுக்கு என்ன வாக்கு கொடுத்தீர்களோ அதை நிறைவேற்ற வேண்டும். கார்களை வாடகைக்கு எடுத்து எம்.எல்.ஏ-களுக்கு கொடுக்க வேண்டும்.


Sivagiri
ஆக 22, 2026 11:50

கொடுக்கலாம், ஆனால் பட்ஜெட் விலையில் சாதாரண கார்கள் வழங்கலாம் , ஒரு தாசில்தார் ரேஞ்சுக்கு மட்டுமே , ஆனால் அதுவும் அரசு காராகவே இருக்க வேண்டும் , பதவியில் இருக்கும் வரை மட்டுமே, பதவி போனால் எல்லாமே போவது போல காரும் திரும்ப வேறு எம் எல் ஏ க்கு போயிரணும் .மற்ற அரசு ஊழியர்கள் போல ,, , ... அவரும் , புது கார்தான் வேண்டும் என்று அடம்பிடிக்க கூடாது ,


Anantharaman Srinivasan
ஆக 22, 2026 11:48

முதல்வர் அரசு பணத்தை ஆற்றில் ஓடும் தண்ணீர் போல் நினைத்து விட்டார். மக்கள் மீதுதான் சுமை விழும் என்பதை IAS அதிகாரிகள் ஏன் எடுத்து சொல்லவில்லை..?


கனோஜ் ஆங்ரே
ஆக 22, 2026 11:40

ஒருத்தனுக்கு நிக்கவே முடியலையாம்... ஆனால், ஒன்பது பொண்டாண்டி கேக்குதாம்...ங்ற கதையா...?


Anantharaman Srinivasan
ஆக 22, 2026 14:51

நிக்க முடியலேனா என்ன..?


spr
ஆக 22, 2026 11:36

இது திமுகவை உடைக்க முன்வைக்கப்பட்ட ஒரு சிறப்பான அரசியல் தந்திரம். இப்போது ஒவ்வொரு திமுக சட்ட மன்ற உறுப்பினரும் "ஏண்டா நீங்க ஆண்ட போதுதான் எல்லாவற்றையும் நீங்களே கொள்ளையடித்தீர்கள் எங்களுக்கு ஏதும் தரவில்லை இப்போது அவர் தருகிறார் அதையும் ஏண்டா கெடுக்கிறீங்க" என்று நினைத்தால் வியப்பில்லை. இரு கட்சிகளிலும் ஏற்கனவே கார் இருப்பவர்கள் வேண்டாமென்று சொல்வார்கள் என்று இரு கட்சித்தலைவர்களும் சொல்லிவிட்டார்கள் எனவே தேர்தல் பதிவில் கார் இல்லையெனப் பாதித்தவர்களுக்கு மாட்டு கார் கொடுப்பதால் குறைவான எண்ணிக்கையே அதனால் ஏற்கலாம் அந்த வசதியும் பதவியில் இருக்கும்வரைதான் என்றால் இன்னமும் சிறப்பு ஆனால், "வாகனத்திற்கான நிதியில் எங்கள் தொகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டிக் கொடுத்தால் நல்லது” என்று சொன்ன திருமதி சௌமியா அன்புமணியின் எண்ணம் ஏன் ஒருவருக்கும் தோன்றவில்லை.? இது போல சேமிப்புக்கு கிடங்குகள், உழவர் சந்தை எனச் சின்னச் சின்ன செலவுகளுக்கு இந்த நிதியைப் பயன்படுத்தலாமே


மேலும் செய்திகள்