உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழக அகழாய்வு முடிவுகளால் மத்திய ஆய்வாளர்களுக்கு நெருக்கடி

தமிழக அகழாய்வு முடிவுகளால் மத்திய ஆய்வாளர்களுக்கு நெருக்கடி

தமிழக தொல்லியல் துறை சார்பில் வெளியிடப்படும் அகழாய்வு முடிவுகள், மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன.தமிழகத்தில், பத்தாண்டுகளாக தொடர்ந்து பல இடங்களில் அகழாய்வுகள் நடைபெறுகின்றன. அகழாய்வு முடிவுகள், இதுவரை எழுதப்பட்டு வந்த வரலாற்று முடிவுகளுக்கு மாறான தகவல்களையும் வெளிப்படுத்தி உள்ளன. முக்கியமாக, தமிழகத்தில் கிடைத்துள்ள இரும்பு உலைகள், இரும்பு கசடுகள், இரும்பு கருவிகள் உள்ளிட்டவை, 5,300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்ற தகவல் உறுதியாகி உள்ளது.மேலும், சிந்துவெளியில் கிடைத்துள்ள குறியீடுகளை போன்ற குறியீடுகளும் அதிகளவில் கிடைத்துள்ளன. இவை குறித்த அறிக்கைகளை, தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. இதனால், இந்திய வரலாற்று சான்றுகளை மீள் கட்டமைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், வடமாநில தொல்லியல் அறிஞர்கள், இதை ஏற்க மனம் இல்லாதவர்களாக உள்ளனர்.இந்நிலையில், 'தமிழக ஆய்வுகளை ஏற்கவோ, மறுக்கவோ தேவையான ஆவணங்களை, ஏன் மற்ற மாநில அகழாய்வுகளில் சேகரிக்கவில்லை; ஏற்கனவே சேகரித்த தொல்பொருட்கள் சார்ந்த ஆய்வை தீவிரப்படுத்தி, அறிக்கை அளிக்க வேண்டும்' என, மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர்களுக்கு அதிகாரிகள் நெருக்கடி தருகின்றனர். அதேநேரம், வடகிழக்கு மாநிலங்கள், மத்திய மாநிலங்களில் அகழாய்வுகளை விரிவாக்க, உரிய நிதியை வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கூறியதாவது: தமிழக அகழாய்வு அறிக்கைகளை, வடமாநில அறிஞர்களால் ஏற்க முடியவில்லை. அதேநேரம், தமிழகத்தில் ஏற்கனவே ஆய்வு செய்த ஆதிச்சநல்லுார் தொல்பொருட்களை, வெளிநாட்டு ஆய்வகங்களுக்கு அனுப்ப, தேவையான நிதியை கூட பெற முடியவில்லை. நீதிமன்ற உத்தரவுக்கு பின், தமிழக அரசு தான் நிதியை அளித்தது. அதேபோல், கீழடி அகழாய்வு அறிக்கையை அளித்து, இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் தான் எங்களை போன்ற ஆய்வாளர்களை நெருக்குகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Tharik Tha
பிப் 13, 2025 19:33

1948லிருந்து சென்ற ஆண்டுவரை,76வருடங்கள் ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு முடிவுகளை வெளியிடாமல் -ஒன்றியரசு வைத்திருந்த காரணத்தால் தான்,தமிழக அரசு தொல்லியல் ஆய்வுகளை முன்னெடுத்தது.இதற்கு ஒன்றிய தொல்லியல் துறை எள்ளளவும் காரணமில்லை?வட இந்திய ஆதிக்கசக்திகள் புனைந்த வரலாற்று கட்டுக்கதைகள் பொய்யாகி விடுமென பயப்படுகின்றனர்உண்மை வெகுநாள் உறங்காது.


செந்தில்குமார்
பிப் 13, 2025 14:23

இந்த ஆய்வுக்கு நிதி ஒதுக்கி மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அமெரிக்கா அனுப்பி முடிவுகளை பெற்றது வரை எடப்பாடியார் செய்தது. முடிவை அறிவிக்கும் முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் தின்று விட்டது. திருட்டு திராவிடமே இந்த முடிவை ஏற்க மனமின்றி நான்காண்டுகள் ஒத்திப் போட்டு விட்டு இப்போது வேறு வழியின்றி தேர்தல் வரும் நேரம் பார்த்து வெளியிட்டுள்ளது..


G VEERAMANIKANDAN
பிப் 13, 2025 00:16

தமிழ்நாட்டின் தற்போதைய வளர்ச்சியை வட இந்தியாவில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தற்போது இரும்பின் காலம் 5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருந்தது என்பதை அவர்களால் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். இந்தியா மட்டுமல்லாமல் உலகளவிலேயே தமிழகத்தில் இருந்துதான் இரும்புக் காலம் தொடங்கியது என்றும், 5,300 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் இருந்தது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Magudeeswaran R
பிப் 12, 2025 22:40

இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்?அகழ்வாய்வு செய்து உண்மையைக் கண்டுபிடித்தது தவறு,இதெல்லாம் வெட்டி வேலை என்ற சாரம்சம் உமது செய்தியில் உள்ளது.


ManiK
பிப் 12, 2025 20:08

எது திகட்டுகிறது என்றால், தீமுக அறைவேக்காடுகள் கீழடி அரசியல் செய்வது தான். போதும் இந்த பீத்தபெருமை. கீழடி உண்மையாகவே இருக்கட்டுமே, இப்போ என்ன கேவலமாக ஆட்சி செய்றீங்க... அதுவும் பிற்காலத்தில் கல்வெட்டில் இருக்கும்.


ஜான் குணசேகரன்
பிப் 12, 2025 19:44

திராவிடம், திராவிடர் பெரியார், தமிழ் புறக்கணிப்பு, வடக்கு தெற்கு, இந்தி எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, திராவிட நாடு, நீட் தேர்வு, போதை ஒழிப்பு ஆகியவற்றை சிறப்பாக வென்ற திமுகவின் புதிய உருட்டல் கீழடி, இரும்பு எல்லாம். எப்படியோ கனிமவள கொள்ளை, மணல் மாஃபியா, மது விற்பனை, நில அபகரிப்பு, பாலியல் பலாத்காரம் எல்லாம் கீழடியால் மடை மாற்றம் செய்ய முடியும்


Bhaskaran
பிப் 12, 2025 16:42

தொல் மாந்தன் தமிழன்தான்


venugopal s
பிப் 12, 2025 14:23

நம்மூர் சங்கிகளுக்கே இந்த வரலாற்று உண்மையை ஒத்துக் கொள்ள மனம் இல்லாத போது வட இந்திய ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், அகழாய்வு நிபுணர்களும், மக்களும் எப்படி அத்தனை சுலபமாக ஒத்துக் கொள்வார்கள்?


ஆரூர் ரங்
பிப் 12, 2025 11:28

விஞ்ஞான ஊழலைக் கண்டுபிடித்த பெருமை கீழடியை விட புகழ்மிக்கது. உலகையே வியக்கவைக்கும்.


அப்பாவி
பிப் 12, 2025 09:46

நல்லதுதான். இல்லேன்னா தமிழே சமஸ்கிருதம், இந்திலேருந்துதான் வந்துச்சுன்னு ஒன்றிய தொல்லிய ஆய்வாளர்கள் ஆராய்ந்து சொல்லி பிரதான் மந்திரி புரஸ்கார் வாங்கிடுவாங்க.


ஆரூர் ரங்
பிப் 12, 2025 11:26

கிடைப்பவற்றில் பழமையான தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்திலே கூட சமஸ்கிருதத்தைப் பற்றியும் அதன் வார்த்தைகளை தமிழில் எப்படிக் கையாள்வது என்பதை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொல், காப்பியம்( காவ்யம்) இரு வார்த்தைகளும் கூட சமஸ்கிருதத்தில் அதே பொருளைத் தரக்கூடியவைகள். எது பழைமையானது என்ற ஆராய்ச்சியை விட்டுவிட்டு பாரத கலாச்சாரத்தின் இரு கண்களாகவே பார்ப்போமே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை