உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு துாக்கு; திருநெல்வேலி போக்சோ கோர்ட் தீர்ப்பு

சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு துாக்கு; திருநெல்வேலி போக்சோ கோர்ட் தீர்ப்பு

திருநெல்வேலி: நெருங்கிய உறவு சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய தொழிலாளிக்கு துாக்குத்தண்டனை விதித்து நெல்லை 'போக்சசோ ' நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த கூலி தொழிலாளி பால் இசக்கி, 47. இவரது நெருங்கிய சொந்தக்கார, 14 வயது சிறுமி பால்இசக்கியின் பராமரிப்பில் உள்ளார். 8 மாதங்களுக்கு முன் அந்த சிறுமியை பால்இசக்கி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததில் கர்ப்பமானார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, போக்சோ சட்டத்தின் கீழ், பால் இசக்கியை கைது செய்தார்.இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள், மருத்துவ அறிக்கைகள் பாலியல் வன்கொடுமை செய்ததை உறுதி செய்தன. நேற்று நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார்.'சிறுமியை பாதுகாக்க வேண்டிய நபரே அவளை சிதைத்தது மன்னிக்க முடியாத மிகப்பெரிய குற்றம்' எனக் கூறி பால்இசக்கிக்கு துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.

நிரம்பி வழியும் சிறைகள்

திருநெல்வேலி மத்திய சிறையில் 1,600 கைதிகள் உள்ளனர். இவர்களில், 500 பேர் ஆயுள் தண்டனை பெற்றவர்கள். போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற, 100க்கும் மேற்பட்டோர் உள்ளனர். 200 பேர் குண்டர் சட்ட கைதிகள். மற்றவர்கள் விசாரணை கைதிகள். தமிழக சிறைகளில் போக்சோ வழக்குகளில் விசாரணை கைதிகள், 2,500 முதல் 3,000 பேர் உள்ளனர். போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் எண்ணிக்கை, 1,200 முதல், 1,500 பேர் வரை உள்ளனர். சிறார்கள் மீது நடைபெறும் பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த, மாவட்டங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள போக்சோ சிறப்பு கோர்ட்களில் விரைவாக விசாரிக்கப்பட்டு, கடும் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Vijay D Ratnam
டிச 26, 2025 00:26

கைது, விசாரணை, வழக்கு எல்லாம் முடிந்து குற்றவாளி என்று நிரூபணம் ஆன பிறகு ஒரு நீதிபதி தீர விசாரித்து தூக்கு தண்டனை தருகிறார் என்றால் அதன் பிறகு எதற்காக அந்த குற்றவாளியை ஆண்டுக்கணக்கில் சிறையில் வைத்து சோறு போட்டு வளர்க்க வேண்டும். ஜட்ஜ்மென்ட் வந்து ஒரு வாரத்திற்குள் தண்டனை நிறைவேற்ற படவேண்டும். தண்டனை கடுமையாக இருந்தால்தான் இந்தியா போன்ற மக்கட்தொகை மிகுந்த நாட்டில் குற்றங்களை ஓரளவாவது கட்டுக்குள் வைத்து இருக்க முடியும்.


Rameshmoorthy
டிச 25, 2025 20:37

I welcome capital punishment for these cases as well food adulteration to be treated same capital punishment A law should be amended accordingly


Natchimuthu Chithiraisamy
டிச 25, 2025 18:11

செய்திகள் ஆச்சரியமடைய செய்கிறது. இது அணைத்து குற்றத்திக்கும் தொடர வேண்டும்.


D Natarajan
டிச 25, 2025 15:45

தூக்கு தண்டனை தற்போது ஒரு கேலிக்கூத்து. இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் இந்த தூக்கு தண்டனை நிறைவேறாது. இது ஒரு நகைச்சுவை தீர்ப்பூ.


அப்பாவி
டிச 25, 2025 14:56

கை முறுக்கைக் கூட தூக்கில் போட முடியாது.அடுத்த பொறந்த நாளைக்கு வெளில வந்தாலும் வியப்பில்லை.


vaiko
டிச 25, 2025 12:17

ஆயுள் தண்டனையாவது கொடுக்கபடுமா?


தமிழன் மணி
டிச 25, 2025 11:15

கவலைப்படாதீங்க நல்லவரே சங்கிகள் கூட்டம் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்த உடன், பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து மாலை போட்டு, நெற்றியில் பொட்டு வைத்து வெளியே விட்டுவிடுவானுகள் அவனுகளுக்கு இது கைவந்த கலை


சத்யநாராயணன்
டிச 25, 2025 13:17

விடியலோ விடியலில் யார் அந்த சார் என்று தான் இன்னும் தெரியவில்லை


பேசும் தமிழன்
டிச 25, 2025 13:30

இப்போது நடப்பது மாடல் ஆட்சி தானே.. அப்போ எதற்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இத்தனை நடக்கிறது? பிஜேபி ஆட்சிக்கு வந்தால் குண்டு வெடிப்பு.. கலவரம்.. பெண் கற்பழிப்பு செய்தால், செய்தவனுக்கு தண்டனை கொடுப்பதற்கு முன்னால்.. அவனை ஒழுங்காக வளர்க்க தவறிய குடும்பத்துக்கு தண்டனை.. புல்டோசர் மூலம் இடித்து தண்டனை கொடுக்கப்படுகிறது.. ஆனால் இங்கே தான் அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் ஈடுபட்ட சார் யார் என்று இன்னமும் தெரியவில்லை.


Keshavan.J
டிச 25, 2025 11:12

இது என்ன புது கடைய இருக்கு. அந்த சிறுமியை அவள் பெற்றோர்கள் எதற்காக இந்த மிருகத்திடம் விட்டார்கள். எதற்கு அரசாங்கம் 10 லக்ஷ்ம் தர வேண்டும். இது ஒரு தவறான முன் உதாரணமா ஆகும். இந்த ஜுட்ஜ்மென்ட்டை மக்கள் தவறாக பயன் படுத்துவார்கள். இதனால் பல சிறுமிகள் வாழ்க்கை வீனா போகும்.


Barakat Ali
டிச 25, 2025 10:48

நிரம்பி வழியும் சிறைகள்? ஷரியத் படி தண்டனை அளியுங்கள்.. அது ஒன்றே தீர்வு. மக்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் புரிந்த குற்றவாளிகளுக்கு உணவிட மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுவது அபத்தம் .... அநீதியும் கூட .....


dandanakka
டிச 25, 2025 12:02

சொல்லறது என்னமோ சரிதான் போல தெரியுது


புதிய வீடியோ