உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பிரதமரை சந்திப்பதை தவிர்த்தாரா கிருஷ்ணசாமி?

பிரதமரை சந்திப்பதை தவிர்த்தாரா கிருஷ்ணசாமி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி வந்த பிரதமர் மோடியை வரவேற்க, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி வராததற்கு, அவருக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக் குறைவே காரணம் என்கிறது, அக்கட்சி வட்டாரம்.இதுகுறித்து, புதிய தமிழகம் கட்சியினர் கூறியதாவது: திருச்சி வந்திருந்த பிரதமரை சந்திக்க, கிருஷ்ணசாமி திட்டமிட்டிருந்தார். ஆனால், வெள்ள நிவாரண பணியில் ஈடுபட்டபோது, அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதனால், அவரால் திருச்சி செல்ல முடியவில்லை. லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைய வேண்டும் என்று, கிருஷ்ணசாமி விரும்புகிறார். இந்த கூட்டணியில் சேர்ந்து, தென்காசி தொகுதியில் போட்டியிட நினைக்கிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன், அங்கு தேர்தல் பணிகளை துவக்கி விட்டார். தென்காசி மாவட்டம் வெள்ளத்தால் பாதித்த போது, கிராம மக்கள் உணவுக்காக, அரசிடம் கையேந்தாமல் இருக்க, தன் சொந்த செலவில், உணவு தயாரித்து வழங்கினார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

இலவுகாத்தகிளி,ஒட்டப்பிடாரம்
ஜன 03, 2024 21:47

evan oru ottuni entha pakkam kathu adhikudho antha pakkam saivaan


M Ramachandran
ஜன 03, 2024 20:24

திருமாவளவனை விட இவர் பரவாயில்லை


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 03, 2024 19:53

பிரதமரை சந்திப்பதை நான் கூடத்தான் தவிர்த்துட்டேன் ..........


நிதிஷ்குமார்,பீகார்
ஜன 03, 2024 16:58

இவன் பாமக ராமதாஸ் போல ஒரு பச்சோந்தி...


திகழ்ஓவியன்
ஜன 03, 2024 14:21

தென்காசி லோக்சபா தொகுதியில் 6 முறை போட்டியிட்டு 6 முறையும் தோல்வியை தழுவிய போதும் ஒருமுறையேனும் வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையோடு பாஜக கூட்டணியில் காத்திருந்தார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. ஆனால் தென்காசி லோக்சபா தொகுதியை திடீரென தர மறுத்துவிட்டதால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுக அணிக்கு தாவ முடிவு செய்துள்ளாராம் டாக்டர் கிருஷ்ணசாமி.


ராஜேந்திரன்,கமுதி
ஜன 03, 2024 16:55

பொய் சொல்லவில்லை என்றால் தூக்கம் வராது....????


duruvasar
ஜன 03, 2024 12:35

பெர்முடா தம்பி கேள்வியை படித்தபின் தான் வழககறிஞர் வையாபுரி கோபால்சாமி எத்தனை வழக்குகளில் வாதாடி சம்பாதித்து இவ்வளவு பெரிய பணக்காரர் ஆனார் என கேட்க ஆர்வம் ஏற்பட்டது.


திகழ்ஓவியன்
ஜன 03, 2024 13:54

இவனை எல்லாம் பெரிய ஆல் ஆக்குகிறார்களா


செந்தமிழ் கார்த்திக்
ஜன 03, 2024 12:04

அவரெல்லாம் BJ-party -கூட்டணியில் இருந்து எப்போவோ வெளியே வந்து அதிமுகவின் கால்களில் விழுந்து விட்டார். இது எல்லாம் தெரிந்தும் கூட தெரியாதது போலவே நடிப்பார்கள் BJ கட்சியினர்.


Duruvesan
ஜன 03, 2024 08:20

அவரு ADMK ல சேர போறாரு. பிஜேபிக்கு டெபாசிட் கிடைக்குமா?


Kasimani Baskaran
ஜன 03, 2024 05:13

யார் வந்தாலும் வராவிட்டாலும் பாஜகதான் இப்பொழுதைய தமிழக மக்களின் நம்பிக்கை... மத்திய அரசின் இலக்கு தமிழக அரசை குறைந்த பட்சம் பத்து லட்சம் கோடியாவது கடன் வாங்க வைப்பதுதான் என்று சொல்லப்படுகிறது.


vaiko
ஜன 03, 2024 02:10

கையில் இருந்து செலவழித்தார் என்றல் அது அவர் ஊசி போட்டு சம்பாதித்த பணமா? இல்லை எடப்பாடி காலத்தில் அடித்த கொல்லையா?


NicoleThomson
ஜன 03, 2024 05:18

அரசு பணத்தை எடுத்து கொடுத்து விட்டு அப்பன் போட்டோவை போடலையே , அந்த வகையில் சந்தோஷப்படுங்க


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை