உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தீபாவளி பரிசு மழையால் தி.மு.க.,வில் உற்சாகம்; விஜயை மட்டுமே நம்புவதால் அ.தி.மு.க.,வினர் அப்செட்

தீபாவளி பரிசு மழையால் தி.மு.க.,வில் உற்சாகம்; விஜயை மட்டுமே நம்புவதால் அ.தி.மு.க.,வினர் அப்செட்

தீபாவளி பணம் கிடைத்ததால், தி.மு.க.,வினர் உற்சாகத்தில் மிதக்கும் நிலையில், அ.தி.மு.க.,வில், த.வெ.க., கூட்டணியே கதி என கிடப்பதால், அக்கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் வருத்தத்தில் உள்ளனர். தி.மு.க.,வில் கிளை, பேரூர், ஒன்றிய, நகரம், வார்டு, பகுதி, மாவட்ட நிர்வாகிகள் வரை, அனைவருக்கும் தீபாவளி பரிசாக, தலா பத்தாயிரம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gceihxwi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பகுதி பிரதிநிதிகள், துணைச் செயலர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், வார்டு செயலர், மாவட்ட பிரதிநிதிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு உள்ளது. பகுதி, ஒன்றிய, நகர செயலர்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், இளைஞர் அணி, மாணவரணி, மகளிரணி நிர்வாகிகளுக்கும் பணம் வழங்கப்பட்டு உள்ளது. பரிசு பொருட்களாக பட்டு வேட்டி, பட்டு சேலை, பட்டாசு, இனிப்பு மட்டுமின்றி, வீட்டு உபயோக பொருட்களும் வழங்கி, கட்சியினரை ஆளும் கட்சித் தலைமை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. கண்டுகொள்ளவில்லை அதேநேரம், எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தலைமை, இந்த முறையும் தீபாவளிக்கு எந்த பரிசும் தராமல் ஒதுங்கிக் கொண்டது. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே, தீபாவளி பரிசுகள் வழங்கவில்லை என்கின்றனர், அக்கட்சி நிர்வாகிகள். தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ள நிலையில், த.வெ.க., வுடன் கூட்டணி அமையும் என்ற நம்பிக்கையை மட்டுமே, அ.தி.மு.க., தலைமை அளித்து வருகிறது. 'அ.தி.மு.க., - பா.ஜ., - த.வெ.க., கூட்டணி அமையும் பட்சத்தில், அது வெற்றி கூட்டணியாக இருக்கும்' என, கட்சி தலைமை கருதுவதால், தீபாவளி பரிசு பற்றி கண்டுகொள்ளவில்லை. எதிர்க்கட்சி தலைமை, த.வெ.க., கூட்டணியே கதி என காத்திருப்பதால், கட்சியினரை மகிழ்விக்க எதையும் செய்ய முன்வரவில்லை. த.வெ.க., வரவை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் சூழலில், அது கை கூடாமல் போனால் , கட்சியினர் உற்சாகம் இழக்க நேரிடும். அதனால், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி, விஜய்க்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

எந்த தேர்தலாக இருந்தாலும், அனைத்து கட்சிகளுக்கும் முன்பாக, அ.தி.மு.க., சார்பில் தேர்தல் பணிகள் துவக்கப்படும். கூட்டணிக்கு எந்த கட்சி வருகிறது என எதிர்பார்க் காமல், கட்சியினர் தேர்தல் பணியில் ஈடுபடுவர். தன்னம்பிக்கை தற்போது நிலைமை மாறி விட்டது. கட்சி தலைமைக்கே தன்னம்பிக்கை போய் விட்டது. 'மெகா கூட்டணி அமைப்போம், பெரிய கட்சி நம் கூட்டணிக்கு வர உள்ளது' என, பொதுச்செயலரே கூறுகிறார். பெரிய கட்சி என்றால், நாம் பெரிய கட்சி இல்லையா என்ற கேள்வி எழுகிறது. பொதுச்செயலரை பின்பற்றி, இரண்டாம் கட்ட தலைவர்களான, முன்னாள் அமைச்சர்கள், த.வெ.க., வந்தால் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில், அக்கட்சிக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இதை வைத்து, கட்சியில் கவனிப்பும் இல்லை. கூட்டணி அமைந்தால் வெற்றி என, தலைவர்கள் பேசுவதை அடுத்து, நிர்வாகிகளும், தொண்டர்களும் சோர்வடைந்துஉள்ளனர். த.வெ.க., போன்ற கட்சிகள், கூட்டணிக்கு வராவிட்டால், தோற்று விடுவோம் என்ற நிலையை ஏற்படுத்துவது, கட்சியின் தோல்விக்கே வழிவகுக்கும். இதை தலைவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். கூட்டணி இல்லாவிட்டாலும், கட்சி வெற்றி பெற, தொண்டர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். த.வெ.க.,வை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது தற்போது தி.மு.க.,வின் பலம் கூட்டணி தான். ஸ்டாலினே இதை திரும்ப திரும்ப கூறி வருகிறார். எனவே தி.மு.க.,வை வீழ்த்த நினைக்கும் சக்திகள் பழனிசாமி பின்னால் அணிவகுக்க வேண்டும். கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்ட நடிகர் சிரஞ்சீவி தனிக்கட்சி துவங்கி, சரியான முடிவு எடுக்க தவறினார். ஆனால், பவன் கல்யாண் சரியான முடிவு எடுத்து ஆந்திர துணை முதல்வராக உள்ளார். அதை பின்பற்றி, விஜய் சரியான முடிவு எடுக்க வேண்டும். அப்போது தான் பவன் கல்யாண் போல் ஜெயிக்க முடியும். அ.தி.மு.க.,வுடன் அவர் பயணம் செய்யவே அவரது கட்சி தொண்டர்களும் விரும்புகின்றனர். அ.தி.மு.க.,வுடன் விஜய் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தால் தி.மு.க.,வை வீழ்த்தலாம். தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், த.வெ.க.,வை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. - உதயகுமார் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க., - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Padmasridharan
அக் 23, 2025 07:07

கட்சியை விட்டு ஆட்கள் போய்விடக்கூடாதுன்னு பரிசு மழை தந்த ஒருவர். கூட்டணி வெச்சாதான் ஜெயிக்க முடியும்னு பயப்படறவங்க கூட்டத்துல மற்றொருவர். தனித்தும் விஜயம் பெறலாம்னு காட்டப்போறவர் புதியவர். நடிகர்களை வெச்சே ஜெயித்தவர் பழையவர். NOTA வை எடுத்தால் அதில் போடும் வீணான எல்லா வோட்டுக்களும் விஜயம் காணும் கட்சிக்கு வர வாய்ப்பு தர இருப்பவர்கள் மக்கள். இதில் அண்ணன் சிரஞ்சீவி என்ன தம்பி பவன் என்ன சாமி. எல்லாம் ஒண்ணுதான்


Matt P
அக் 23, 2025 00:03

பணம் கட்சியில மிதக்குது நீச்சலடிச்சச்சு புடிச்சுக்குங்க. எல்லாம் நம்ம பணம் தான். கட்சி பணம் தான். பணம் குறிப்பிட்ட கட்சியில தேங்கி கிடக்கு அவங்க கிட்ட ஆட்சியம் இருக்கு. கட்சியில சேர்ந்தா அனுபவிக்கலாம். ஏழைகள் அன்றாடம் வேலைக்கு போய் ஒரு வேளைக்காவது சாப்பிடுங்க. தீபாவளியை மதிப்பதில்லை. தீபாவளியில் நம்பிக்கையில் . ஆனால் கட்சிக்காரங்கள் கொண்டாட பணம் பரிசு. இன்னாடா வாழ்க்கை இது.


Muthukumaran
அக் 22, 2025 18:16

விஜய் தனித்து நின்று தொங்கு சட்ட சபை அமைவதைத் தவிர்த்து ஒன்றிணைந்து தவெக எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ளலாம் என் எடப்பாடியாரின் நோக்கம் தவறில்லை. இரு கட்சிகளின் நிரந்த வாக்குகள் போக மீதமுள்ள வாக்கைப்பெற்று ஆட்சியில் அமர பரிசை எதிர்பார்ப்பதில் பொருளில்லை.முடியாது. எதிர்கட்சியாக இருக்கும்போது பண்டிகை பரிசுகளை விட்டுக் கொடுப்பதில் நியாயமிருக்கிறது. ஆட்சிக்கு வந்த பின் ஈடு செய்து கொள்ளலாம்.


angbu ganesh
அக் 22, 2025 11:44

தமிழ் நாடு அரசியல் எதை நோக்கி பயநிக்கறது பணம் பதவி மட்டுமே


pakalavan
அக் 22, 2025 10:42

எடப்பாடி தனது பதவிக்காக + குடுப்பார்


Haja Kuthubdeen
அக் 22, 2025 11:08

தீய சக்திகளை வெளியேற்றனும் என்றால் எடப்பாடியும் கொஞ்சம் இறங்கிதான் வரனும்.விஜய் அடி பட்ட புலி...என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.கரூர் ..விஜய்க்கு பல அரசியல் விளையாட்டை சொல்லி கொடுத்து இருக்கும்.


நிவேதா
அக் 22, 2025 10:00

அதிமுக பயணிக்கும் திசையை பார்த்தால், கடைசியில் விஜய் தலைமையில் உள்ள கூட்டணியில் 50-60 சீட் அதிமுகவுக்கு ஒதுக்கபடும். பிஜேபி கழட்டி விடப்படும் போல் தெரிகிறது.


Haja Kuthubdeen
அக் 22, 2025 11:04

இங்கே விஜய் பற்றிகவலைப்பட்டு கருத்து சொல்லும் உபிக்கள் கவணத்திற்கு.. விஜய் அஇஅதிமுகவிடம் சேர்ந்தாலும்...காங்கிரசோடு சேர்ந்து தனி அணியா போட்டியிட்டாலும் லாபம் அஇஅதிமுகவிற்குதான்.


Haja Kuthubdeen
அக் 22, 2025 08:45

தீபாவளி பரிசை நம்பி அஇஅதிமுக தொண்டன் ஒன்னும் தவம் கிடக்கவில்லை. கற்பனையா எதையாவது எழுத வேண்டாம்.


Ajrjunan
அக் 22, 2025 14:10

வேற எதை நம்பி இருக்கான். காசு செலவு பண்ணாம கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே ஜெயிக்க முடியும். அதுவும் கூட்டணி தயவுடன்.


sankaranarayanan
அக் 22, 2025 07:23

பாமர மக்களுக்கு தீபாவளி பரிசு வெறும் கைதான்


Srprd
அக் 22, 2025 08:53

வெறும் கையுடன் சேர்ந்து விலைவாசி உயர்வு. அஇஅதிமுக இப்போதே சோர்ந்து போய் விட்டது போல் தெரிகிறது.‌