உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வெளிநாடு செல்ல தி.மு.க.வினருக்கு தடை

வெளிநாடு செல்ல தி.மு.க.வினருக்கு தடை

'சட்டசபைத் தேர்தல் முடியும் வரை, வெளி நாடுகளுக்கு செல்ல வேண்டாம்' என தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு, தி.மு.க.,வை தயார்படுத்தும் வகையில், 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில், 'ஒன் டூ ஒன்' நிகழ்ச்சி வாயிலாக, சென்னை அறிவாலயத்தில் சட்டசபை தொகுதி நிர்வாகிகளை நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். அந்த வகையில், இதுவரை, 150க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளின் நிர்வாகிகளை சந்தித்துள்ளார். இந்நிலையில், தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சியின் மா.செ.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த நாலரை ஆண்டுகளில் தி.மு.க., அரசு, நிறைய மக்கள் நலத் திட்டங்களை தீட்டி, அதை முறையாக நிறைவேற்றி இருக்கிறது. சொல்லப்போனால், ஆட்சி வாயிலாக நிறைய சாதனைகள் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவற்றையெல்லாம் கட்சியின் மா.செ.,க்களும் எம்.எல்.ஏ.,க்களும் தொகுதி பொறுப்பாளர்களும் முறையாக கொண்டு சேர்க்கவில்லை. இதனால், தி.மு.க., மீதான ஈர்ப்பு பொதுமக்களுக்கு குறைந்துவிட்டதாக, பல்வேறு கருத்துக்கணிப்புகள் வாயிலாக தி.மு.க., தலைமை கண்டறிந்துள்ளது. அதேபோல, கட்சித் தொண்டர்களையும் பொதுமக்களையும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அரவணைத்து செல்ல வில்லை என்ற குற்றச்சாட்டு தமிழகம் முழுதும் உள்ளது. தி.மு.க., ஆட்சியின் மீது ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் ஆதரவு எப்படி உள்ளது; மக்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதையெல்லாம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் கேட்டறியாமல் உள்ளனர். இதையெல்லாம் விரைந்து சரி செய்ய வேண்டும் என முதல்வர் நினைக்கிறார். அதனால், அமைச்சர்கள், மா.செ.,க்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் தேர்தல் முடியும் வரை வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது எனஉத்தரவிட்டுள்ளார். துறை சார்ந்து வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு மட்டும் அமைச்சர்கள் வேண்டுமானால், கட்சி தலைமையின் உரிய அனுமதி பெற்று செல்லலாம். ஆனால் மற்றவர்கள், தொடர்ந்து தொகுதி மக்களை சந்திக்க வேண்டும். அவர்கள் குறைகளை கேட்டு களைய வேண்டும். அரசு நிறைவேற்றிய திட்டப் பலன்களை, மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கட்சிக்குள் மாவட்டம் தோறும் இருக்கும் கோஷ்டி பூசல்கலையும் உடனடியாக தீர்க்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கட்சியின் கோஷ்டி பூசலை தீர்க்கும் விவகாரத்தில், பொறுப்பு அமைச்சர்களால் தீர்வு காண முடியாதவர்கள், மண்டல பொறுப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அவர்கள் அப்பிரச்னையை தீர்த்து வைப்பர். அவர்களாலும் முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டால் தான், தலைமை நிலைய நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். கட்சி பிரச்னைகள் அனைத்தும், இம்மாதம் இறுதிக்குள் தீர்வு காண வேண்டும். பொதுமக்கள் தெரிவிக்கும் அனைத்து கோரிக்கைகளையும் உரிய அதிகாரிகள் மற்றும் கலெக்டர் கவனத்துக்குக் கொண்டு சென்று, ஒவ்வொன்றையும் தீர்க்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., எதிர்பார்த்த வெற்றியை பெறும் என முதல்வர் கூறியுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Mani . V
அக் 22, 2025 05:01

ஆமாம், அப்பா குடும்பம் மட்டும் வெளிநாடு சென்று முதலீடு செய்து வரலாம். பெத்தாச்சியுடன் Bachelor பார்ட்டி கொண்டாடிவிட்டு வரலாம்.


Ramesh Sargam
அக் 22, 2025 00:06

வெளிநாட்டில் வசிக்கும் திமுக உறவுகள் இனி இந்தியாவுக்குள் காலடி எடுத்துவைக்கக்கூடாது. அதற்கும் ஒரு தடை விதிக்கவேண்டும்.


adalarasan
அக் 21, 2025 22:11

நல்ல முடிவு.ஆனால் இது எல்லோருக்கும் துணை முதல்வர் உட்பட பொருந்தும் என நினைக்கின்றேன்


Raj S
அக் 21, 2025 21:58

வெளிநாடு போகாம இருந்துட்டா மட்டும் அப்டியே அறுத்து தள்ளிருவானுங்க... எப்படி இருந்தாலும் மக்களை குடி மற்றும் பிரியாணிக்கு அடிமையாக்கி, காசு குடுத்து இல்லனா மிரட்டி ஓட்டு வாங்கறவங்க எங்க இருந்தா என்ன?


இராம தாசன்
அக் 21, 2025 19:07

தலைமை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் அடி பொடிகள் தவிர மற்ற அனைவருக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்


இராம தாசன்
அக் 21, 2025 19:05

கொத்தடிமைகளுக்கு அந்த எண்ணம் வர கூடாது


Raj
அக் 21, 2025 17:44

போனால் அமைச்சர்கள் அடித்த ஊழல் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்து விடுவார்கள், இவர் போய் வந்தாயிற்றே. அதனால் தான் மற்றவர்களுக்கு தடை.


Krismoo
அக் 21, 2025 16:13

அந்த அளவுக்கு இவருக்கு பயம் இப்பவே வந்துடுச்சு. உண்மையிலேயே நல்ல ஆட்சி செஞ்சிருந்தால் எதுக்கு பயப்படணும், அப்படினு தி மு க காரனே கேட்குறான்.


ManiK
அக் 21, 2025 15:29

கவலைப்படாதீர்கள் கழக உபி கண்மணிகளே. இன்னும் 6 மாதத்தில் மக்களே நம்மை வெளிநாட்டில் நிம்மதியாக இருக்க ஏற்ப்பாடு நிச்சயம் செய்வார்கள்.


SUBRAMANIAN P
அக் 21, 2025 14:28

சிங்கம் கெளம்பிருச்சு.. சர்வாதிகாரி சாட்டையை சுழற்ற ஆரம்பிச்சிட்டாரு. இனி அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைதான். அப்படியே உ பி களுக்கு இன்னும் தீபாவளி படி, போனஸ் போடல. அதையும் போட்டிருங்க. நம்பிக்கை இருந்தா ஹாப்பி தீபாவளி.


புதிய வீடியோ