உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தோல்வி பயத்தில் உளறும் தி.மு.க., நாகேந்திரன் கடும் தாக்கு

தோல்வி பயத்தில் உளறும் தி.மு.க., நாகேந்திரன் கடும் தாக்கு

கோவை: “தோல்வி பயம் காரணமாக, முருகன் மாநாடு குறித்து, தி.மு.க.,வினர் ஏதேதோ பேசி வருகின்றனர்,” என, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

கோவையில் அவர் அளித்த பேட்டி:@பழனியில், தி.மு.க., அரசு நடத்திய மாநாடு மட்டுமே உண்மையான முருக பக்தர்கள் மாநாடு என்றும், மதுரையில் நடத்தப்பட்ட முருக பக்தர்கள் மாநாட்டுக்கு யாரும் வர மாட்டார்கள் என்றும் தி.மு.க.,வினர் கருதினர். ஆனால், மதுரையில் மாநாடு நடக்கும் முன்பே, மூன்று லட்சம் பேர் வந்து சென்றனர்.நேற்று முன்தினம் நடைபெற்ற மாநாட்டுக்கு இரண்டு லட்சம் பேர் வந்தனர். மொத்தம் ஆறு லட்சம் பேர், பங்கேற்றுள்ளனர். சிறு அசம்பாவிதம் கூட நடக்கவில்லை. ஒரு போலீஸ் கூட, மாநாட்டு வளாகத்தில் இல்லை. எனினும், மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரும் கட்டுப்பாட்டுடன் ஒழுங்காகவும், பயபக்தியுடனும் பங்கேற்றனர். மாநாட்டின் மிகப் பிரமாண்டமான வெற்றியை பார்த்ததும், தோல்வி பயத்தில் தி.மு.க.,வினரும், அதன் கூட்டணி கட்சியினரும் ஏதேதோ உளறியபடி பேசுகின்றனர். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், நெற்றியில் பூசப்பட்ட விபூதியை வி.சி., தலைவர் திருமாவளவன் அழித்ததற்காக, அவர் கூறும் விளக்கம் நம்பும்படியாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Oviya Vijay
ஜூன் 24, 2025 19:54

உங்கள பார்க்குறப்போ சந்தோசமா இருக்கு நைனா...


Oviya Vijay
ஜூன் 24, 2025 10:49

உங்கள பார்க்குறப்போ சந்தோசமா இருக்கு நைனா...


புரொடஸ்டர்
ஜூன் 24, 2025 08:38

2026 தமிழ்நாடு அரசு தேர்தலில் உறுதியான தோல்வி பயத்தில் பாஜக மதுரையில் நடத்திய முருக பக்தர்கள் மாநாடு நாடகம் வெளிப்படையாக தெரிகிறது நயினார் நாகேந்திரன்.


Gopalu
ஜூன் 24, 2025 08:14

நயினார் ஒரு காமெடி பீசு. எல்லாம் எலக் ஷன் முடித்ததும் இவர் காணாமல் போய் விடுவார்.


பேசும் தமிழன்
ஜூன் 24, 2025 07:24

மதுரையில் கூடிய மக்கள் கூட்டம் திமுக மற்றும் அதன் அல்லக்கை கட்சிகளுக்கு தேர்தல் தோல்வி பற்றி பயத்தை ஏற்படுத்தி உள்ளது.... அது அவர்களின் உளறல் மூலம் தெளிவாக தெரிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை