உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஈரோடு கிழக்கு தொகுதியை எங்களிடமிருந்து தி.மு.க., பறிக்காது: செல்வப்பெருந்தகை

ஈரோடு கிழக்கு தொகுதியை எங்களிடமிருந்து தி.மு.க., பறிக்காது: செல்வப்பெருந்தகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''ஈரோடு கிழக்கு தொகுதியை, எங்களிடம் இருந்து தி.மு.க., பறிக்காது; இயற்கையாகவே, அது காங்கிரஸ் தொகுதிதான்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

செல்வப்பெருந்தகை பேட்டி:

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சீரமைப்பு பணி நடக்கிறது. மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கான பொறுப்புகளுக்கு இணையதளம் வாயிலாக விருப்ப மனு பெறப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள், 15 தினங்களுக்குள் மனு அளிக்கலாம், அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, பரிசீலனை செய்யப்பட்டு, காங்கிரஸ் தலைமைக்கு பரிந்துரை செய்யப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2ar5l3oa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில், வரும் 7ம் தேதி காலையில் மறைந்த காங்., தலைவர்கள் மன்மோகன் சிங், இளங்கோவன் படங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 8ம் தேதி 'கிராமம்தோறும் காங்கிரஸ்' என்ற தலைப்பில், கிராம கமிட்டி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடக்கிறது. இதில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் அஜோய் குமார், சூரஜ் ஹெக்டே பங்கேற்கின்றனர்.கிராம, நகர, பேரூராட்சி, மாநகராட்சி கமிட்டிகளை, யாரெல்லாம் சிறப்பாக செய்து முடிக்கின்றனரோ, அவர்களுக்கு மாநில பதவி மற்றும் எம்.எல்.ஏ., 'சீட்'க்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் வரும் ஏப்., மாதத்திற்குள் முடிவடையும். பொங்கல் பரிசாக, 1,000 ரூபாய் வழங்க வேண்டும். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்படுகிறது. தற்போது, இந்த வழக்கை, சிறப்பு குற்றப் புலனாய்வு குழு விசாரிக்கிறது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஞானசேகரன் மொபைல் போன் கிடைத்துள்ளது.மொபைல் போனை ஆய்வு செய்தாலே, 'யார் அந்த சார்?' என, தெரிந்து விடும். எந்த சாராக இருந்தாலும், அவர் மாட்டிக் கொள்வார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் தொலைத்தெடார்பு ஆணையம் இருக்கிறது.ஈரோடு கிழக்கு தொகுதியை தி.மு.க., எங்களிடம் இருந்து பறிக்காது; இயற்கையாகவே அது காங்கிரஸ் தொகுதி தான். அந்த நம்பிக்கை எனக்கும் முழுமையாக இருக்கிறது. தொகுதியை காங்., பெற்று, அதில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

NACHI
ஜன 04, 2025 23:05

இந்த தொகுதியில் நிக்கிறவன் எல்லாம் சங்கு ரெடி......???


xyzabc
ஜன 04, 2025 13:57

எதற்கும் லாயக்கு இல்லாத தலைவர்


Yes your honor
ஜன 04, 2025 13:13

ஆமாம், அன்று தகுதியை மறந்து குரலை உயர்த்திப் பேசி கெத்து காட்டியதால் தான் இன்று கெஞ்ச விட்டிருக்கிறார்கள். இன்னும் இருக்குடி மாப்ளே உனக்கு.


ஆரூர் ரங்
ஜன 04, 2025 10:44

பூர்ணிமா திருமகன் வாரிசுரிமைப்படி வாய்ப்பு கேட்கலாம். ஆனா கிடைக்காது. வாரிசுக்கு பதவி திமுக வில் மட்டுமே கட்டாயம்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 04, 2025 13:16

வாரிசுக்கு பதவி திமுக வில் மட்டுமே என்பது மிகவும் தவறு. பாஜக வில் 18 ஒன்றிய அமைச்சர்கள் வாரிசுகள். 53 எம். பி. க்கள் வாரிசுகள். பா ம க வில் அன்புமணி, சௌமியா, நா த க வில் கயல்விழி என்கிற அன்னம்மாகாளிமுத்து, தே மு தி க வில் பிரேமலதா, விஜயபிரபாகரன், த மா கா வில் வாசன், அதிமுக வில் ஜெயக்குமார் மகன், ஓ பி எஸ் மகன், எல்லோரும் வாரிசுகள் தான்.


Ramaraj P
ஜன 04, 2025 08:10

பிளாஸ்டிக் சேருக்கு கொடுக்க வேண்டும்.


ManiK
ஜன 04, 2025 07:02

தொகுதிய பறிக்கமாட்டானுவ... உன் கான்கிரஸ் மானத்த மட்டும் பறிச்சிரும் திமுக. உங்கள் கூட்டாளி தர்மம் அப்படி.


ராமகிருஷ்ணன்
ஜன 04, 2025 07:01

இடை தேர்தல் செலவு நிச்சயம் நீங்க செய்ய மாட்டீங்க. திமுக தான் செலவு செய்து உங்களை ஜெயிக்க வைக்கனும். எதுக்கு உங்களுக்கு சீட். போயி ஒழுங்கா ஜிங்சா தட்டுற வேலையை பாரு.


pv, முத்தூர்
ஜன 04, 2025 05:40

போட்யிடுவதற்க்கும் செலவு செய்யஆல் இருக்கிறதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை