உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி; தீயாய் வேலை செய்கிறது தி.மு.க.,

 சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி; தீயாய் வேலை செய்கிறது தி.மு.க.,

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், தி.மு.க., தீயாய் வேலை செய்கிறது; மற்ற கட்சிகள் மவுனமாக உள்ளன. தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, கடந்த 4ம் தேதி துவங்கியது. இதற்கான விண்ணப்பங்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள் வாயிலாக வீடுதோறும் வினியோகம் செய்யப்படுகின்றன. இதுவரை தமிழகத்தில் 78.09 சதவீதம் வாக்காளர்களுக்கு, விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. வாக்காளர் விண்ணப்ப படிவம் வினியோகம், படிவம் பூர்த்தி செய்தல் போன்ற பணிகளில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு உதவ, அனைத்து கட்சிகளிலும் ஓட்டுச்சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அ.தி.மு.க.,வில் மாவட்டச் செயலர், பொறுப்பாளர்கள், ஐ.டி., அணி நிர்வாகிகள் மேற்பார்வையில், ஓட்டுச்சாவடி முகவர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஆனால், பெரும்பாலான பகுதிகளில் அ.தி.மு.க.,வினர் ஆர்வமுடன் இப்பணியில் ஈடுபடவில்லை. பா.ஜ., உட்பட மற்ற கட்சியினரும், சில பகுதிகளில் மட்டுமே இப்பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தி.மு.க.,வினர் தீயாக வேலை செய்து வருகின்றனர். சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்வதற்காக, அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, ஆ.ராஜா, தங்கம் தென்னரசு, பன்னீர்செல்வம், சக்கரபாணி, செந்தில் பாலாஜி, கனிமொழி ஆகியோர், எட்டு மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் மேற்பார்வையில், மாவட்டச் செயலர்கள், தொகுதி பார்வையாளர்களுக்கு சென்னையிலும், மற்ற மாவட்டங்களிலும், ஒன்றிய, நகர, பேரூர், கட்சி நிர்வாகிகளுக்கு, வழக்கறிஞர் குழுவினராலும், ஒவ்வொரு தொகுதியிலும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடப்பதை, மண்டல பொறுப்பாளர்கள் நேரடியாக கண்காணிக்கின்றனர். ஒவ்வொரு மண்டலத்திலும் வாக்காளர்களுக்கு உதவ, வழக்கறிஞர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, சென்னை அறிவாலயத்தில் வாக்காளர்களுக்கு உதவ, உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை தொடர்பு கொண்டு, சந்தேகங்கள் கேட்போருக்கு உரிய விளக்கம் அளிக்கப்படுகிறது. சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை, ஒரு புறம் தி.மு.க.,வினர் எதிர்த்தாலும், மறுபுறம் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அவர்கள் மனதில் இடம் பிடிக்க முயற்சித்து வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் வாக்காளர் விண்ணப்ப படிவங்களை வினியோகம் செய்வதுடன், அவற்றை பூர்த்தி செய்ய மக்களுக்கு உதவுவது, மீண்டும் அவற்றை பெற்று ஓட்டுச்சாவடி அலுவலரிடம் ஒப்படைப்பது போன்ற பணியிலும் ஈடுபட்டுள்ளனர். - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Mr Krish Tamilnadu
நவ 14, 2025 18:17

இதை போல் மற்ற மாநிலங்களில் அந்த மாநில கட்சிகள் செய்தனவா?. இல்லை தேர்தல் ஆணைய அதிகாரிகளா?. ஒருபுறம் மக்களுக்கு உதவி என்றாலும், கேள்விதாள் தயாரிக்கும் ஆசிரியருக்கு தேர்வு மாணவர் கேள்வித்தாள் பிரதி எடுக்க உதவுவது போல், பூத் சீட் வாக்காளர்களிடம் அரசியல் கட்சிகள் கொடுப்பது தடை செய்யபடும் போது, இந்த பணி எவ்வகையில் சரி?.


நடராஜன்
நவ 14, 2025 16:56

இந்த வெறி பிடித்த பணம் சம்பாதிக்கும் கும்பலை த வெ க வென்றால் நாட்டுக்கு நல்லது. ஒரு குடும்பத்தின் சாவு பல கோடி குடும்பங்களுக்கு நன்மை.


Vasan
நவ 14, 2025 16:53

SIR will favour ruling party of the state. Example: Bihar.


Suppan
நவ 14, 2025 20:18

ராகுல் ஸ்டாலினைத்தான் S.I.R பயம் பிடித்திருக்கிறதென்றால் உங்களையுமா? அய்யோ பாவம்


vbs manian
நவ 14, 2025 15:22

கழகத்துக்கு வாழ்வா சாவா என்ற சவால்.


V K
நவ 14, 2025 15:10

என தாயா இது எல்லாம் நாமா ஜெயிப்பது அந்த ஓட்டு வைத்து தான் அந்த ஓட்டையும் தேர்தல் ஆணையம் நீக்கி விட்டால்


Muralidharan S
நவ 14, 2025 13:58

திராவிஷங்களுக்கு தொடர்ந்து வாக்களித்து வெற்றிபெற வைத்துக்கொண்டு இருக்கும் போலி வாக்காளர்களை நீக்காமல் இருக்க தீயாய் வேலைசெய்கிறார்கள் போல இருக்கிறது....


Sundar R
நவ 14, 2025 11:50

Even Common men and illiterates are much awareness about the SIR. Whenever, the politicians belonging to the "INDI" parties talk something wrong about SIR in public or TV channels, they are immediately becoming a laughing stock. NDA parties in Tamil Nadu should make a pigeon watch on the DMK workers whether they are indulging in fraud like they did in Coimbatore Constituency during 2024 Parliamentary Elections.


N S
நவ 14, 2025 11:07

உடல் சரியில்லாத மூத்த தலைவர் கூறுவது போல இருக்கு, "என்ன தயா பிஹார்லே ஓத்திகிட்டு போச்சு? தமிழகத்திலே வாக்காளர் பணி சிக்கல் உண்டாக்கும் போல இருக்கே?" கள்ள வோட்டு நபர்களை தான் நீக்க முடியும். நம்ம உடன்பிறப்புகளுக்கு ஆபத்து இல்லாம இருக்கணுமேன்னு கவலை வந்துவிட்டது போலும்.


ராமகிருஷ்ணன்
நவ 14, 2025 09:29

திமுக தீயாக வேலை செய்தால் என்ன, பேயாக வேலை செய்தால் என்ன. நல்ல சரியான கூட்டணி தான் வெற்றி பெறும்


V RAMASWAMY
நவ 14, 2025 09:25

பா ஜ க தீயணைப்பு வண்டிகள் செயல்பட காத்திருக்கின்றன.


Vasan
நவ 14, 2025 16:54

SIR will backfire BJP in Tamilnadu. Wait and see. DMK will be back to power.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை