உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தம்பட்டம் அடிக்க கோவில் கும்பாபிஷேகம்; ஹிந்து முன்னணி தலைவர் காட்டம்

தம்பட்டம் அடிக்க கோவில் கும்பாபிஷேகம்; ஹிந்து முன்னணி தலைவர் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: வெற்றுப்பெருமையை தம்பட்டம் அடித்துக்கொள்ள, தமிழக அரசு கோவில்களில் கும்பாபிேஷகம் நடத்துவதாக, ஹிந்து முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

தென்காசி, காசி விஸ்வநாதர் கோவில் திருப்பணிகள் முழுதுமாக முடியாத நிலையில், அவசர கதியில் கும்பாபிஷேகம் நடத்த அரசு திட்டமிட்டது. அதற்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், பல கோவில்களில் திருப்பணிகள் முறையாக நடக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. அரைகுறை பணிகளால் கும்பாபிஷேகம் முடிந்தும், பல கோவில்கள் பழுதான நிலையிலேயே உள்ளது. பழனி முருகன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களிலும் இப்பிரச்னை ஏற்பட்டது. கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடைகளை அள்ளித் தருகின்றனர். ஆனால், நிர்வாகம் செய்யும் அலுவலர்கள், அறங்காவலர்கள் இதை முறையாக செலவிடுவதில்லை; முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.தென்காசி விஸ்வநாதர் கோவிலில், கும்பாபிஷேக செலவுத் திட்டம், 1.67 கோடி ரூபாய் என அறிவித்துள்ளனர். செலவினங்கள், இஷ்டம்போல் காட்டப்பட்டுள்ளது. திருச்செந்துார் கோவிலில் நடைபெறும் பணியில் அலட்சியத்தை, சுட்டிக்காட்டியவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கு கட்டப்பட்டு வரும் மண்டபம் அதன் தடுப்புச்சாரம் அகற்றியவுடன் விழுந்து விட்டது. இதற்குப்பின், அரசு தரப்பில் அமைதி மட்டுமே காணப்படுகிறது.தமிழக முதல்வர் இத்தனை ஆயிரம் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது என்று வெற்று தம்பட்டம் அடித்து, பெருமை பேசுவதை விடுத்து, கோவில்களில் உரிய காலத்தில் முறையான திருப்பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sridhar
ஏப் 05, 2025 16:32

இவர்கள் செய்யும் ஆகம மீறல் கும்பாபிஷேகத்தில் பாவம் தான் வரும்.


ramesh
ஏப் 05, 2025 10:53

கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தாலும் குறை சொல்லுவார்கள் ,நடக்கவில்லை என்றாலும் குறை சொல்லுவார்கள் அப்படிப்பட்ட கூட்டம் இது


venugopal s
ஏப் 05, 2025 09:47

வேண்டாத மருமகள் நின்றாலும் குற்றம் உட்கார்ந்தாலும் குற்றம் என்பது போல் இவர் பேசுகிறார்!


எவர்கிங்
ஏப் 05, 2025 09:23

சிவன் சொத்து குல நாசம் பெருமாள் சொத்து பரதேசம்.... நாசமாகப் போகட்டும் கொள்ளையர்கள் .


Sampath Kumar
ஏப் 05, 2025 08:42

எல்லாம் வெயில் கொடுமை தான் முருகா இவரை மன்னித்து விடு


vivek
ஏப் 05, 2025 10:09

வெயில் கொடுமையால் டாஸ்மாக் விற்பனை அதிகமோ .....


முருகன்
ஏப் 05, 2025 06:08

ராமர் கோவில் கும்பாபிஷேகம் முழுமையாக பணிகள் முடிந்த உடனேயே கும்பாபிஷேகம் நடந்தது


vivek
ஏப் 05, 2025 07:19

அட முருகா..ஹிந்து பெயரில் நீ ஒரு ஈன பிறவி


Dharmavaan
ஏப் 05, 2025 08:43

முழுமையோ இல்லையோ திருட்டுத்தனமான ஏமாற்று வேலை இல்லை


sridhar
ஏப் 05, 2025 16:34

உங்க வூர் வேலையை மட்டும் பாரு தம்பி . உத்தர பிரதேசம் எங்கே என்று மேப்பில் கூட காட்ட தெரியாது .