உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருவாசகம் பாட கட்டணம் வசூல்; திராவிட மாடலின் ஜிஸ்யா வரி

திருவாசகம் பாட கட்டணம் வசூல்; திராவிட மாடலின் ஜிஸ்யா வரி

சென்னை: தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில், திருவாசகம் பாட, கட்டணம் செலுத்த வேண்டும் என, வலியுறுத்தியதற்கு, ஹிந்து தமிழர் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அக்கட்சி தலைவர், ராம.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், கடந்த 25 ஆண்டுகளாக, சிவ பக்தர்கள், கயிலை கிருஷ்ணன் தலைமையில், திருவாசகம் முற்றோதல் பாடி வருகின்றனர். இக்கோவிலின் செயல் அலுவலர் பொன்னி, 'தன் அனுமதி இல்லாமல், எதுவும் நடக்கக் கூடாது' என, கோவில் உரிமையாளர் போல் நடந்து கொள்கிறார். ஹிந்து சமய அறநிலையத் துறை சட்ட விதிகளுக்கு முரணாக, அதிகார மமதையில், சிவனடியார்களை அவர் மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. திருவாசக முற்றோதல் பாட கோவிலில் அனுமதி வாங்க வேண்டும்; நன்கொடை என்ற பெயரில், கட்டணம் செலுத்த வேண்டும் என்பது அடாவடியான செயல். கோவில் உபரிநிதியில், 'தேவாரம் பரப்ப வேண்டும்' என்பது சட்டம். ஆனால், கோவிலில் திருவாசகம் முற்றோதல் செய்வதற்கே, 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது, திராவிட மாடலின் ஜிஸ்யா வரி விதிப்பு. சிவனடியார்களை, அவமரியாதையாக பேசிய கோவில் செயல் அலுவலர் மீது அறநிலையத்துறை கமிஷனர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனல், காசிவிஸ்வநார் கோவிலில், இந்து தமிழர் கட்சி சார்பில், மிகப் பெரிய திருவாசக முற்றோதல் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

சிந்தனை
அக் 21, 2025 13:48

மிகவும் அநியாயம்


Rajakumar
அக் 20, 2025 21:59

இறைவா இவர்களுக்கு சரியான பாடம் புகட்டு. உன்னை நம்பியுள்ளோர்களை காப்பாய். சிவாய நமஹ


தமிழ் நிலன்
அக் 20, 2025 20:53

தமிழர் வாழ்வியல் கலாச்சாரம் இஸ்லாமிய படை எடுப்பு ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பு ஆகியவற்றுடன் முடியாமல் திராவிட ஆட்சியில் தொடர்ந்து இயங்கி வருகிறது


SRIDHAAR.R
அக் 20, 2025 18:43

இந்த மக்களிடம் ஒற்றுமை வராத வரை எதையும் செய்யும்


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
அக் 20, 2025 18:17

எவ்வளவு பட்டாலும் மக்கள் விழிப்பர்களா? மீண்டும் திமுக ஆட்சி அமைக்க செய்வார்கள்.


ஸ்ரீ
அக் 20, 2025 17:46

கடந்த நான்கரை ஆண்டுகளில் அனைத்து தமிழக அரசு ஊழியர்களும் திராவிட மாடல் அரசில்பொறுக்கி களாக மாறிவிட்டனர்


அப்பாவி
அக் 20, 2025 15:59

கோவில்ல சாமி கும்புடலாம்னு போனா இடத்தை அடைச்சிக்கிட்டு ஏராளமானோர்...


theruvasagan
அக் 20, 2025 14:46

தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. நீ நல்லோர்களை ரட்சிப்பவன். தீயோர்களை அழிப்பவன். இந்து தர்மத்தை அழிக்க நினைக்கும் தீயசக்திகளை உன் நெற்றிக்கண்ணைத் திறந்து சாம்பலாக்கு.


சிந்தனை
அக் 20, 2025 14:20

கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் எழுதிய சட்டத்தின் அழகு... சந்தியில் சிரிக்கிறது... Muட்டாள் ஏமாளி மக்களை பார்த்து....


ManiK
அக் 20, 2025 12:30

சேகர் பாபு திட்டம்தீட்டி ஸ்டாலின் ஆசிபெற்று கிருப்டோ மற்றும் நாத்திக கும்பலை கோவில் மற்றும் முக்கிய பதவிகளில் அமரவைத்து கொள்ளையும், அழிப்பும் சீராக நடப்பதை 4.5 ஆண்டுகளாக உறுதி செய்துள்ளார்கள்.


முக்கிய வீடியோ