உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / போலி வாக்காளர்களை நீக்கினால் ஆட்சிக்கு வரலாம்

போலி வாக்காளர்களை நீக்கினால் ஆட்சிக்கு வரலாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பா.ஜ.,வின் மாநில அளவிலான 'பூத் கமிட்டி' நிர்வாகிகள் மாநாடு, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., அரங்கில் நேற்று நடந்தது. இதில், தேர்தல் பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா, தமிழக பா.ஜ., மூத்த தலைவர்கள், 234 சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் பங்கேற்றனர் .

நீக்கம் கூட்டத்தில் பைஜயந்த் பாண்டா பேசியது குறித்து, கட்சியினர் கூறியதாவது:

டில்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். அங்குள்ள முகவரியில் பலர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தனர். அவர்கள், தங்கள் மாநிலத்திலும், வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்தனர். இதை பயன்படுத்தி, அங்குள்ள கட்சிகள், வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை சேர்த்தன. தேர்தல் சமயத்தில், போலி வாக்காளர்களை பயன்படுத்தி, ஓட்டுகளை பதிவு செய்து, வெற்றி பெற்று வந்தன. தேர்தல் கமிஷன், டில்லியில் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியால், இரட்டை வாக்காளர்கள், உயிரிழந்த வாக்காளர்கள், போலி வாக்காளர்கள் ஆகியோர் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கியது. இதை எதிர்த்து, 'ஆம் ஆத்மி' கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. எனினும், வாக்காளர் பட்டியலில், உண்மையான, தகுதியான வாக்காளர்கள் இருப்பதை உறுதி செய்து, போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். டில்லி சட்டசபை தேர்தலில், பல தொகுதிகளில், 500 - 1,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க, போலி வாக்காளர்களை நீக்கியதே முக்கிய காரணம். தமிழகத்திலும் ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க., அனைத்து தொகுதிகளிலும் போலி வாக்காளர்களை சேர்த்துள்ளது. கூட்டணி ஆட்சி தற்போது தமிழகத்தில் நடக்கும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், பா.ஜ.,வினர் முழுவீச்சில் செயல்பட்டு, இரட்டை வாக்காளர்கள், உயிரிழந்த வாக்காளர்கள், போலி வாக்காளர்கள் ஆகியோரின் பெயர்களை நீக்கும்படி, தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவிக்க வே ண்டும். போலி வாக்காளர்களை நீக்கிவிட்டால், வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு அவர் பேசியதாக கட்சியினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Muralidharan S
நவ 05, 2025 10:53

75 வருடங்களாக தேர்தல் நடக்கிறது... இப்பொழுத்துதான் போலி வாக்காளர்களை நீக்கும் முயற்சியையே ஆரம்பித்து இருக்கின்றனர்.. பிறப்பு முதல் இறப்பு வரை குடிமக்களுக்கான துறைகள் அனைத்தையும் ஒரே database க்கு கீழ் கொண்டுவந்து இணைத்தால், போலி என்பது எந்த துறையிலும் இருக்காது.. இந்தியாவில் இவ்வளவு மென்பொருள் வல்லுநர்கள் மற்றும் பணியாளர்களை வைத்துக்கொண்டு இதை செய்ய முடியாது என்பது சொல்லவே முடியாது. முற்றிலும் automated connected database & fully end-to-end automated public services முறையில் எல்லா துறைகளும் இயங்கினால், போலிகள் மட்டும் அல்ல... பெரும் அளவிலான ஊழல்களையும் தடுக்கலாம்.. அனைத்திலும் online வசதிகள் வந்துவிட்ட பிறகு.. வாக்களிப்பதையும் எங்கிருந்தும் அவரவர் தொகுதிகளில் வாக்களிக்கலாம்.. இதற்க்கு மிகவும் கடுமையான பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய hardware & software applications மிகவும் உதவும்.. விருப்பமிருப்பவர்கள் விடுப்பு கூட எடுக்காமல், எங்கிருந்து வேண்டுமானாலும் தங்கள் வாக்குகளை , தங்கள் தொகுதிகளில் செலுத்தலாம்.. எல்லா வங்கிசேவைகள் மற்றும் நுகர்வோர் கட்டணங்களை online மூலம் செய்ய முடியும்... அது போல அதிகப்படியான hack செய்யமுடியாத பாதுகாப்பு அம்சங்களுடன் இதை கொண்டு வரமுடியும்.. நாடாளும் அரசியல் கட்சிகளுக்கு நேர்மையான மனம் இருந்தால் இது சாத்தியம்..


Suppan
நவ 05, 2025 17:25

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைத் தால் இரட்டை ஓட்டுக்களைத் தவிர்க்கலாம். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உச்ச நீதிமன்றம் வாக்காளர் சம்மதப்பட்டால் இணைக்கலாம். இல்லாவிடில் தனி நபர் சுதந்திரம் இருக்காது என்று கூறிவிட்டது. அரைகுறையாகச் செய்வது ஒரு பயனையும் அளிக்காது.


Iyer
நவ 05, 2025 19:59

உண்மைதான். நீங்கள் சொல்வது 100% சரிதான். இனி ONLINE VOTING - FROM ANYWHERE AT ANY PARTICULAR CONSTITUENCY திட்டத்தை அமல் படுத்தனும். சுமார் 3 கோடி வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஓட்டுரிமை இன்றி தவிக்கிறார்கள். மோதி அவர்களின் அரசு நீங்கள் சொன்ன சீர்திருத்தங்களையும், ONLINE VOTING ஐயும் அமல் படுத்தும் என்று நம்புகிறேன்.


Krishna
நவ 05, 2025 06:30

There Must be Thorough Screening for AllCitizenServices incl VoteRights Strictly Based on NRC CitizenProof to Eliminate ModiMentalAadharSpyMaster Regularised Billions of Foreign Infiltrators& PAN-IndiaResidence Presence to avoid MultipleBenefits


சமீபத்திய செய்தி