உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அதிகார மமதையை தகர்த்தெறிவோம்: தினமலர் கார்ட்டூனுக்கு அழகிரி விளக்கம்

அதிகார மமதையை தகர்த்தெறிவோம்: தினமலர் கார்ட்டூனுக்கு அழகிரி விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை தகர்த்தெறிவோம் என, நான் கூறவில்லை. அதிகார மமதையை தகர்த்தெறிவோம் என்ற பொருள்படும்படிதான் கூறினேன்'' என, 'தினமலர்' நாளிதழ் கார்ட்டூனுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

அவரது அறிக்கை:

சென்னை மாநகர காவல் துறையை நான் விமர்சித்து பேசியதை மையப்படுத்தி, நேற்று 'தினமலர்' நாளிதழில் கார்ட்டூன் எனப்படும், கேலிசித்திரம் வெளியிடப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் நான் நடத்திய, ரயில் மறியல் போராட்டம் திட்டமிடாதது; அது தற்செயலாக நடந்தது. நான் கும்பகோணத்தில் இருந்து சென்னை வருவதற்காக, கடந்த 2023 மார்ச் 22ல், கும்பகோணத்தில் ரயிலுக்காக காத்திருந்தேன். அப்போது, எம்.பி.,யாக இருந்த ராகுலை தகுதி நீக்கம் செய்துள்ளதாக, தகவல் கிடைத்தது. உடனே அதை கண்டித்து, ஏதேனும் ஒரு வகையில், என் எதிர்ப்பை காட்ட வேண்டும் என, எண்ணினேன். அந்த நேரம் நான் செல்ல வேண்டிய ரயில் வந்தது. உடனே, எங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்ய, நானும், என்னுடன் வந்திருந்த சில தொண்டர்களும், ரயில் முன் மறியல் செய்தோம். அந்த இடத்தில், என்னுடைய போராட்ட உணர்வுதான் முக்கியமே தவிர, எத்தனை நபர்களுடன் சென்றேன் என்பது முக்கியமல்ல. போராட்ட உணர்வே முக்கியம். 'சென்னை மாநகர போலீஸ் அலுவலகத்தை தகர்த்தெறிவோம்' என்று, நான் கூறவில்லை. மாறாக, அவர்களின் அதிகார மமதையை தகர்தெறிவோம் என்ற பொருள்படவே கூறினேன். காங்கிரஸ் வன்முறையில் நாட்டமில்லாத சித்தாந்தத்தை கொண்ட கட்சி. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

நிக்கோல்தாம்சன்
ஆக 07, 2025 21:53

காமெடி பீசு


Rajasekar Jayaraman
ஆக 07, 2025 21:21

இவர் ஒரு கான் கிராஸ் தொண்டர் தேச விரோதிகளிடம் தேச பக்தியை எதிர் பார்ப்பது சிறுபிள்ளை தனம்.


naadodi
ஆக 07, 2025 17:08

அப்துல் ரஹீம் அண்ணே அந்த மரியாதையே அதிகமுங்க


panneer selvam
ஆக 07, 2025 16:24

So fear about Arivalayam . Your Kumbakonam rail rako agitation is world famous just next to Gandhi ji Dhandi yatra .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 07, 2025 14:35

இது சப்பைக்கட்டா சமாளிப்பா அல்லது இரண்டுமா


Ganapathy
ஆக 07, 2025 14:23

அது...அந்த பயம் இருக்கணும்லேய்...


Anand
ஆக 07, 2025 13:18

//காங்கிரஸ் வன்முறையில் நாட்டமில்லாத சித்தாந்தத்தை கொண்ட கட்சி// டெல்லி சீக்கிய கலவரத்தில் பாதிக்கப்பட்ட சீக்கியர் யாராவது இவனோட அறிக்கையை படித்தால் காலில் இருப்பதை கழற்றி அடிப்பான்.


Abdul Rahim
ஆக 07, 2025 14:32

மரியாதையா எழுதி பழகுங்க


பேசும் தமிழன்
ஆக 07, 2025 20:46

அட அதாவது பரவாயில்லை.... இலங்கையில் இலட்சக்கணக்கான பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதை எந்த கணக்கில் சேர்ப்பது ???


SJRR
ஆக 07, 2025 13:05

இந்த விளக்கம் சொல்வதற்கு இவருக்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது?


Ramesh Sargam
ஆக 07, 2025 12:57

மனுஷன் போலீஸ் என்றவுடன் எப்படி பயந்து தன் கருத்தை மாற்றி கூறுகிறார் பாருங்கள்.


VSMani
ஆக 07, 2025 12:39

ஏதேனும் ஒரு வகையில், என் எதிர்ப்பை காட்ட வேண்டும் என, எண்ணினேன். அந்த நேரம் நான் செல்ல வேண்டிய ரயில் வந்தது. உடனே, எங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்ய, நானும், என்னுடன் வந்திருந்த சில தொண்டர்களும், ரயில் முன் மறியல் செய்தோம். அப்படி என்றால், ஒவ்வொருவரும் தங்கள் எதிர்ப்பை காட்ட ரயில் முன் மறியல் செய்யலாமா? என்ன தலைவரோ?


முக்கிய வீடியோ