வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வாழ்த்துகள்
நான் தற்போட்டது கோவையில் வசித்து வருகிறேன். எங்கள் பூர்விக ஊர், கோவில்பட்டிக்கு அருகில், அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயில் தாலுகாவில் இருந்தது. நான் 1966 ஆம் ஆண்டு, SSLC தேர்வில் வெற்றிபெற்றபின் திருநெல்வேலி மாவட்ட Employment Exchange-ல் பதிவு செய்துவிட்டு, இரவு அங்கே தங்கவேண்டியிருந்ததால், ஒரு சினிமா அரங்கிற்குச் என்று நடுஇரவு காட்சி முடிந்து பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல புறப்பட்டபோது, அங்கே, தியேட்டருக்கு வெளியே, பஸ்ஸ்டாண்டிற்கு வெளியே மற்றும் உள்ளே, தினமலர் விற்பதற்கு அங்கங்கே சிறுவர்கள் நின்று கொண்டிருந்ததையும், மக்கள் வரிசையில் நின்று தினமலர் பத்திரிக்கை வாங்கிக்கொண்டு செல்வத்தையும் பார்த்தேன். அப்போது நேரம் அதிகாலை மணி 2.00. அன்றுதான் முதன்முதலில் நான் தினமலரை வாங்கிப் படித்தேன். அப்போது 1966 -ல் தினமலர் திருநெல்வேலி பதிப்பு ஒன்று தான் இருந்தது அன்று ஆரம்பித்த எனது தினமலர் வாசிக்கும் பழக்கம், இன்று பவள விழா கொண்டாடும் தினம் வரையும் படித்துக்கொண்டிருக்கிறேன். நான் அமெரிக்காவிற்கு இதுவரை ஆறு முறை சென்று வந்துள்ளேன். அங்கே நண்பகல் 12 - 1.00 மணி அளவில், அப்போது இங்கே நமது நாட்டில் மணி அடுத்த நாள் காலை 4.00 மணி இருக்கும். என்னுடைய Laptop ல் இன்டர்நெட்டில் தினமலர் படித்துவிட்டுத்தான் மத்திய உணவே அருந்துவேன். அந்த அளவிற்கு நான் தினமலருக்கு அடிமையாகிவிட்டேன் என்பதில் நான் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். நமது மாகாணத்தில் ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள், மற்றும் அதிகாரிகளின் குற்றம் குறைகளை அஞ்சாமல் எங்கள் பத்திரிக்கையான தினமலர் மூலம் தெரிவிப்பதால், அன்றைய அரசும், இன்றைய அரசும் அவர்களது விளம்பரங்களை தினமலருக்கு கொடுப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன. அதனால், தினமலருக்கு ஏற்பட்ட வருமான இழப்பு ஏராளம். ஆனால், எங்களுக்கு பணம் முக்கியமில்லை, உண்மையை உரக்கச் சொல்லுவதே முக்கியம் என்று எண்ணி, இன்று வரை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதுவே தினமலர் உண்மையின் உரைகல் என்று வாசகர்களால் பெருமையகாக அழைக்கப்படுகிறது. மற்றொரு விஷயமும் இங்கே குறிப்பிட வேண்டும். மற்ற பத்திரிக்கைகள் சினிமாவிற்கும், நடிகர்- நடிகைகளுக்கும் முக்கியம் கொடுத்து பல பக்கங்களை ஒதுக்கி, வாசகர்ளை முகம் சுளிக்க வைப்பது ஒன்றை தினமலர் தினமும் செய்வதில்லை. ஞாயிறு வாரமலரில் வரும் சிறுகதைகள், தொடர்கதைகள், அந்துமணி கேள்வி-பதில்கள் அந்துமணியின் கட்டுரைகள், என பலவற்றை அடுக்கிக்கொண்டு போகலாம். சிறுவர்மலர், ஆன்மிக மலர் என்று பலவகையான இணைப்புகளால் கட்டப்பட்ட மலர்மாலையை அணிந்துகொண்டு வீறு நடை போட்டு நடந்து வந்து இன்று 75 வயது பவள விழா கொண்டாடும் தினமலர் நிறுவனரின் வழித்தோன்றல்களுக்கும், திணமலர் வெற்றிக்கு உழைத்து வந்த இன்றும் உழைத்துக்கொண்டிருக்கும் அனைவருக்குக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த பூமி உள்ளவரை தினமலரும் இருக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்கள்... மேன்மேலும் சிறக்க
நீடுழி வாழட்டும் வளரட்டும் நல்வாழ்த்துக்கள்
எத்தனையோ தாக்கங்கள், போட்டிகள், மக்களிடையே வாசிப்புத்தன்மை குறைந்துவருதல் இதை எல்லாம் தாண்டி வளர்ந்து இருக்கும் தினமலருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
அருமை வாழ்த்துக்கள் .உங்கள் முன்னோர் இந்த நாளிதழுக்கு செய்த சேவை மகத்தானது .உங்கள் தந்தையிடம் எங்கள் அன்பை சொல்லுங்கள் .நன்றிகள் .
வாழ்த்துக்கள் .