உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருச்சியை 2வது தலைநகராக்க அ.தி.மு.க., குழுவிடம் வலியுறுத்தல்

திருச்சியை 2வது தலைநகராக்க அ.தி.மு.க., குழுவிடம் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: 'திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும்' என்று, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க.,வின் லோக்சபா தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், திருச்சியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர்.திருச்சி, கருமண்டபம் பகுதியில், அக்கட்சியின் துணை பொதுச்செயலர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலுார், அரியலுார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகளையும், தங்கள் கருத்துக்களையும் மனுவாக வழங்கினர். மத்திய அரசுடன் சார்ந்து தீர்க்கப்பட வேண்டிய மக்கள் பிரச்னைகள் குறித்த 25 பக்க அறிக்கையை, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவர் விஸ்வநாதன் மற்றும் குழுவினரிடம், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலர் குமார் ஒப்படைத்தார்.அந்த அறிக்கையில், 'இந்திய தண்டனை சட்டம் என்பதை பெயர் மாற்றம் செய்யும் முடிவை திரும்பப் பெற வேண்டும். அரசின் பொதுத் துறை நிறுவனமான 'பெல்' தொழிற்சாலையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. 'இப்படி பெறப்பட்டிருக்கும் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை பரிசீலித்து, தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும்' என்று விஸ்வநாதன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ