உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மதுரை முருக பக்தர்கள் மாநாடு; முழு பலத்தை காட்ட களமிறங்கிய பா.ஜ., சங் பரிவார் அமைப்புகள்

மதுரை முருக பக்தர்கள் மாநாடு; முழு பலத்தை காட்ட களமிறங்கிய பா.ஜ., சங் பரிவார் அமைப்புகள்

சென்னை: மதுரையில் வரும் 22ம் தேதி நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் முழு பலத்தைக் காட்ட, பா.ஜ.,வும், சங் பரிவார் அமைப்புகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில், ஆடு, கோழி பலியிட, சில அமைப்புகள் முயன்றதைத் தொடர்ந்து, அங்கு பிரச்னை ஏற்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=htcsbuk5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

5 லட்சம் பேர்

அதைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் முருகன் மலையை, சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சி நடப்பதாக, ஹிந்து அமைப்புகள் சார்பில், கடந்த பிப்ரவரி 4ல் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது.அதன் வெற்றியைத் தொடர்ந்து, ஜூன் 22ல், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப் போவதாக, கடந்த மார்ச் மாதமே ஹிந்து முன்னணி அறிவித்தது. துவக்கத்தில் இந்த மாநாட்டு பணிகளில், ஹிந்து முன்னணி மட்டுமே ஈடுபட்டு வந்த நிலையில், இப்போது பா.ஜ., - விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், குறைந்தது ஐந்து லட்சம் பேரை திரட்ட வேண்டும் என்ற இலக்குடன், பா.ஜ.,வும், சங் பரிவார் அமைப்புகளும் முழுவீச்சில் களமிறங்கியுள்ளன. கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்கள், கோவை நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், பா.ஜ., சங் பரிவார் அமைப்பு நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று, குடும்பத்துடன் மாநாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒருவேளை சாப்பிடாமல் விரதம் இருந்து, மாநாட்டு வெற்றிக்காக உழைத்து வருகின்றனர்.

அழைப்பு

இது தொடர்பாக, ஹிந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் கூறியதாவது:மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு, தமிழக வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும். அரசியல் உள்ளிட்ட எந்த வேறுபாடும் இல்லாமல், முருக பக்தர்களின் ஒன்றுகூடலாகவே மாநாடு இருக்கும். அதனால்தான், தி.மு.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுத்து வருகிறோம். சாத்துார் ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் நேரில் அழைப்பு விடுத்துள்ளனர். மாநாட்டு அழைப்பிதழ் கொடுப்பதற்காக, முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்; இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், மஹாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர், மாநாட்டில் பங்கேற்கின்றனர். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ள முருகன் கோவில்களில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

madhesh varan
ஜூன் 04, 2025 17:22

முருகனுக்கு சங்கிகளின் உள்நோக்கம் புரியாதா என்ன ?


Abdul Rahim
ஜூன் 04, 2025 12:25

தலையிட்டா என்ன பண்ணுவ


ManiK
ஜூன் 03, 2025 23:25

வெற்றிவேல்...வீரவேல்.. கோஷம் மதுரை எங்கும் ஒலிக்கட்டும். நம் மக்களுக்காக விழிப்புணரிவு சேவை செய்ய துணியும மக்கள் இயக்கங்கள் நீடூழி வாழ்க.


Lokesh Babu
ஜூன் 03, 2025 23:13

eathu thevai ellatha aanee evangalukku yaar idea tharangannu theriyala tamilnati arasiyal kala nelavaram puriyuthannu theriyala issue base arasiyal pannala enga evangala onnumay penetrate pannamudiyathu


venkatesan
ஜூன் 03, 2025 20:13

Great


Abdul Rahim
ஜூன் 03, 2025 18:47

ராமனை தூக்கி கொண்டு போலி பக்தியோடு அலைந்தார்கள் அவர் அயோத்தியிலேயே தோற்கடித்து பாடம் புகட்டிவிட்டார் ,இப்ப புதுசா முருகன் பக்கம் திரும்பி இருக்காங்க.


venugopal s
ஜூன் 03, 2025 15:19

இருப்பதோ பதினெட்டு பேர், இதில் என்ன முழு பலம்?


shiva
ஜூன் 03, 2025 08:36

"கந்தருக்கும்" - சிக்"கந்தருக்கும்" போர்..சூரபத்மனையே அழித்தவரல்லவா கந்தர்?


முகமது நபி
ஜூன் 03, 2025 07:32

அரசியலில் இந்துகடவுளை இழுப்பதுதான் விடியலின் வேலை. இதையும் மக்கள் உணர வேண்டும்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 03, 2025 08:40

அப்படி இழுக்க வில்லை என்றால் விடியல்களுக்கும் உபிஸ்களுக்கும் பிழைப்பு நடத்த முடியாது... சமதர்ம சமுதாயம் ஜாதிகள் இல்லை என்பார்கள்....அங்கே மத்திய அரசிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்துவார் கள்.....மதசார்பற்ற என்று ரம்ஜானுக்கு குல்லா போட்டு நோன்பு கஞ்சி குடிப்பார்கள் கிருஸ்துமஸ்க்கு வாழ்த்து சொல்லி கேக் சாப்பிடுவார்கள் ஆனால் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாமல் தமிழ் அரசனான ராவணனை கொன்ற தினம் என்று துக்கம் அனுஷ்டிப்பார்கள்.... இவர்களின் அரசியல் அவ்வளவே....!!!


Abdul Rahim
ஜூன் 03, 2025 18:44

இந்து பெயரில் எழுத துப்பில்லாமல் இஸ்லாமிய பெயரில் எழுதுகிறாயே உனக்கு வெட்கமா இல்லையா .


Oviya Vijay
ஜூன் 03, 2025 07:29

பிரச்சனைகள் உருவாக்குவதற்கு என்றே கூட்டும் கூட்டம் என்று சொல்லுங்கள்... பலே... பலே...


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 03, 2025 08:22

பிரச்சனை உருவாகவில்லை என்றால் கந்தன் மலை சிக்கந்தர் மலை ஆகிவிடுமே அதனால் நடுநிலைகளுக்கு என்ன கவலை.... பலே... பலே....!!!


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
ஜூன் 03, 2025 08:46

அப்பத்துக்கு மதம் மாறிய கூட்டத்திற்கு இந்துக்களை பார்த்தால் இளக்காரமாகத்தான் தெரியும். ஏலே ஓவியா எங்கள் இந்து மதத்தில் தலையிடாதே என உன்னை பலமுறை எச்சரிக்கை செய்தாயிற்று இனிமேலும் இதுபோன்று கருத்து போடுவதை நிறுத்திக் கொள்.


vivek
ஜூன் 03, 2025 11:47

இந்த சின்ன கருத்துக்கு உனக்கு இருநூறு ரூபாய் அதிகம் ..பெரிய மொக்கை கருத்து போடவும்


சமீபத்திய செய்தி