உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க.,வில் பா.ஜ., ஆதரவாளர்கள் தடுக்க முடியாமல் பழனிசாமி தவிப்பு

அ.தி.மு.க.,வில் பா.ஜ., ஆதரவாளர்கள் தடுக்க முடியாமல் பழனிசாமி தவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அ.தி.மு.க.,வில் நாளுக்கு நாள் பா.ஜ., ஆதரவு நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பா.ஜ., தலைவர்களை வெளிப்படையாக புகழத் துவங்கி உள்ளனர். அவர்களை தடுக்க முடியாமல், பழனிசாமி தவித்து வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8l9338ps&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த லோக்சபா தேர்தலின்போது, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பா.ஜ., உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். இனிமேல் பா.ஜ., உடன் கூட்டணி கிடையாது என அறிவித்தார். ஆர்.எஸ்.எஸ்., பேரணியில் பங்கேற்றதற்காக, தளவாய் சுந்தரத்தின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, பா.ஜ.,வினர் நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்ட, கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இவ்வாறு பா.ஜ.,வுக்கு எதிரான நிலைபாட்டில் இருந்த பழனிசாமி, திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். சட்டசபை தேர்தல் கூட்டணிக்காக, டில்லி சென்று அமித் ஷாவை சந்தித்து திரும்பினார். 'கூட்டணி வேறு; கொள்கை என்பது வேறு. எங்களின் கொள்கை என்றுமே நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும்' என, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். முன்னாள் அமைச்சர் உதயகுமார், 'இந்தியாவின் இரும்பு மனிதர் அமித் ஷா' என, புகழாரம் சூட்டினார். அதேபோல், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, ராஜேந்திர பாலாஜி என, பா.ஜ., ஆதரவு நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. தற்போது, அவர்களை கட்டுப்படுத்த முடியாமல், பழனிசாமி திணறி வருகிறார்.

இது குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:

முன்னாள் அமைச்சர்களில் ஒரு சிலர் தவிர பெரும்பாலானோர், தி.மு.க., கூட்டணியை வீழ்த்த, பலமான கூட்டணி தேவை. அதற்கு பா.ஜ., வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, விரும்புகின்றனர். அமித் ஷாவை, பழனிசாமி சந்தித்த பிறகு, அந்த எண்ணம் வலுப்பட்டு, வெளிப்படையாக பா.ஜ., நிர்வாகிகளுடன் நெருக்கம் காட்டுகின்றனர். தமிழக பா.ஜ., தலைவராக, நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியானதும், முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜு, வேலுமணி போன்றோர், அவரை சட்டசபை வளாகத்தில் சந்தித்து பேசினர். கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள, விவேகானந்தர் நினைவு மண்டபத்தில், கொடிக் கம்பத்தில் காவிக்கொடி ஏற்றப்படுவதை தடுக்கும்விதமாக, உயர் நீதிமன்ற உத்தரவைக் காட்டி, கொடிக்கம்பத்தை அகற்ற, பேரூராட்சி முயற்சி செய்தது. இதற்கு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எதிர்ப்பு தெரிவித்தார். சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என, கலெக்டரிம் தெரிவித்தார். அதன்பின் கொடிக்கம்பத்தை அகற்றும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது. ஏற்கனவே, ஆர்.எஸ்.எஸ்., பேரணியில் பங்கேற்றதற்காக, அவர் மீது அ.தி.மு.க., தலைமை நடவடிக்கை எடுத்த நிலையில், தளவாய்சுந்தரத்தின் தற்போதைய செயல்பாடுகளை பழனிசாமியால் தடுக்க முடியவில்லை. அதேபோலவே, பா.ஜ., ஆதரவு நிலைப்பாட்டில் செயல்படும் கட்சியினரை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார் பழனிசாமி. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Natchimuthu Chithiraisamy
ஏப் 09, 2025 20:05

இஸ்லாமிய கிறிஸ்துவ ஓட்டு போய்விடும் என்று கவலைப்படுகிறார் எடப்பாடியார். அது போய் பல காலம் ஆயிடுச்சு. பிஜேபி ஓட்டே 15 % போய் விடுமே. புரியவில்லை அவருக்கு. இனி இஸ்லாமிய கிருஸ்துவ ஓட்டுகள் திமுகவிடமிருந்து தனக்கு வந்து விடுமா? இதுவும் புரியவில்லை. கடந்த தேர்தலில் பிஜேபி அதிமுக ஓட்டை கூட்டி பார்த்தால் புரியுமா இல்லையா என்பதும் புரியவில்லை.


ராமகிருஷ்ணன்
ஏப் 03, 2025 19:20

எடப்பாடி ஒரு மண்குதிரை, கூட்டணி பேச தகுதி இல்லை நம்பவே முடியவில்லை. அதிமுகவுக்கு கூட்டு தலைமை தான் நல்லது. தொண்டர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.


மு செந்தமிழன்
ஏப் 03, 2025 08:46

கார்ட்டூன் சூப்பர்


அப்பாவி
ஏப் 03, 2025 08:11

யார் யாருக்கு தில்லியிலிருந்து என்ன நெருக்கடியோ? ஊழல் எல்லோரும் ஊழல்.


Dharmavaan
ஏப் 03, 2025 08:04

சமயத்துக்கு ஏற்றாற்போல் மாறுவார் நெளிவார் கடலில் விழுவார் பின்பு கழுத்தை நெறிப்பார்... நம்ப கூடாது.. அண்ணாமலையை அகற்ற கேட்பது பிறகு பிஜேபி ஆட்டம் கண்டுவிடும் என்பதே பின்பு அதை எப்படியும் ஆட்டுவிக்கலாம் என்று கணக்கு .அண்ணாமலை போனால் திரும்ப அப்பதவி கொடுத்தால் வரமாட்டார்.பிஜேபி உஷாராக இருக்க வேண்டும்


Haja Kuthubdeen
ஏப் 03, 2025 07:40

எடப்பாடியாரால் கட்டுபடுத்த முடியவில்லை என்பது யூகம்.கூட்டணி அமையப்போகிறது என்பது நிர்வாகிகளுக்கு தெரிந்த விசயம் என்பதால் பேச்சில் மாற்றம்.அவ்ளோதான்.


malar mannan
ஏப் 03, 2025 07:37

பிஜேபியை ஆதரிக்கும் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் ஊழல் வழக்குகளிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ளவே பிஜேபியை ஆதரிக்கிறார்கள் ஊரறிந்த உண்மை.


Haja Kuthubdeen
ஏப் 03, 2025 10:00

ஊழல் வழக்குதான் காரணம் என்றால் பிஜெபி பதவியேற்ற இத்தனை வருடங்களில் எத்தனை பேரை குற்றவாளி என்று தண்டனை வாங்கி கொடுத்துள்ளது? அமலாக்கதுறை சிபிஐ வருமான வரித்துறை மூலம் ரெய்டு மட்டும்தானே நடக்குது....


சமீபத்திய செய்தி