உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜய் கூட்டணி சேர முன்வந்தால் பா.ஜ.,வை பழனிசாமி கழற்றி விடுவார்: அடித்து சொல்கிறார் தினகரன்

விஜய் கூட்டணி சேர முன்வந்தால் பா.ஜ.,வை பழனிசாமி கழற்றி விடுவார்: அடித்து சொல்கிறார் தினகரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''விஜய் கூட்டணிக்கு வந்தால், பா.ஜ.,வை பழனிசாமி கழற்றி விடுவார்,'' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார். திருவண்ணாமலையில், அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பொதுக்கூட்டத்தில், த.வெ.க.,வினர் யாரும் கொடியுடன் வரவில்லை. அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்களே, த.வெ.க., கொடியுடன் வந்துள்ளனர். 'த.வெ.க., தலைமையை ஏற்கும் கட்சிகள் கூட்டணிக்கு வரலாம்' என்று, மதுரை மாநாட்டில் விஜய் பேசினார். இப்போது, த.வெ.க.,வை கூட்டணிக்கு, பழனிசாமி அழைக்கிறார். அதாவது, த.வெ.க.,வை தலைமையை ஏற்க, அவர் தயாராகி விட்டார் என்பதையே காட்டுகிறது. 'அ.தி.மு.க., ஆட்சி தொடர உதவி செய்த பா.ஜ.,வுக்கு நன்றியுடன் இருப்பேன்' என, சமீப காலமாக பழனிசாமி பேசி வருகிறார். ஆனால், பா.ஜ.,வுக்கு மிகமிக முக்கியமான, 2024 லோக்சபா தேர்தலில், அக்கட்சியுடன் கூட்டணி வைக்காதது ஏன்? பழனிசாமி நம்பகத்தன்மை அற்றவர். துரோகத்தை தவிர, அவருக்கு வேறு எதுவும் தெரியாது. அ.தி.மு.க., கூட்டணிக்கு விஜய் வந்தால், பா.ஜ.,வை கழற்றி விட்டு விடுவார். தான் முதல்வராக கட்சி துவங்கியுள்ள விஜய், பழனிசாமியை ஏற்க மாட்டார். நடக்காது என்று தெரிந்தும், தொண்டர்களை தக்க வைப்பதற்காக, அவர் பேசி வருகிறார். அ.தி.மு.க., பலவீனமாக உள்ளது. இதை பா.ஜ.,வும் யோசிக்க வேண்டும். பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினால், அக்கூட்டணிக்கு, 15 சதவீதத்திற்கு கீழ் தான் ஓட்டுகள் கிடைக்கும். பழனிசாமி தன் குடும்ப கட்சியாக, அ.தி.மு.க.,வை மாற்றி வருகிறார். வரும் சட்டசபை தேர்தலுக்கு பின், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வரும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தி.மு.க.,வுக்கு ஆதரவா? ''மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே, கரூர் துயரச் சம்பவம் உள்ளிட்ட வழக்குகளில், சி.பி.ஐ., விசாரணையை, தி.மு.க., அரசு எதிர்க்கிறது. எந்த மாநில அரசாக இருந்தாலும் இதைத்தான் செய்யும். இதற்காக, நான் தி.மு.க.,வை ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ள கூடாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Mr Krish Tamilnadu
அக் 12, 2025 15:00

விஜய் ஆதரவு வேண்டும் என்று நினைத்து இருந்தால் கரூர் சம்பவத்திற்கு முதல் ஆளாக அலைபேசியில் பேசி இருக்க வேண்டும். நடுநிலை கருத்தை தெரிவித்து இருக்க வேண்டும். சும்மா வேடிக்கை பார்த்து விட்டு, நகர்வுகள் சரியில்லை எனும் போது கூவுவது என்ன நியாயம்?. 70-75களில் அனைத்தையும் சாதிக்க ஆள்பலம் தேவைப்பட்டது. அவர்கள் தங்களை பாதுகாக்க கட்சியில் கை வைத்து கொண்டனர். அடுத்து கனிமவள தொழில், அவர்கள் கட்சிகளில் கால் வைத்தனர். இப்படி ஏதோ ஒரு பாதுகாப்புக்காக சேர்ந்த கூட்டமாக தான் கட்சிகள் இருக்கின்றன. கொள்கை அற்ற கூட்டங்கள் குடும்ப வலிமைக்காக கொடி பிடிப்பது இன்னும் ஆங்காங்கே இருக்கிறது. ஆக மக்கள் புதிய அணுகுமுறைக்கு ஆசைப்படுகிறார்கள். தவெக தலைவரை குழப்புவதற்கு ஆள் இருக்கிறதே தவிர, வெல் விஷர் யாரும் மில்லை. சமூக ஆர்வலர், ஐஏஎஸ், பத்திரிகையாளர் என மக்கள் பணி தெரிந்தவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கட்டும்.


ராமகிருஷ்ணன்
அக் 12, 2025 14:56

20 ரூபாய் டோக்கனுக்கு வாய் மைல் நீளம்,


Haja Kuthubdeen
அக் 12, 2025 09:37

ஒரு சதவீத ஓட்டு இல்லாதவனை எல்லாம் பொருட்படுத்த அவசியமே இல்ல..


RAMAKRISHNAN NATESAN
அக் 12, 2025 08:32

தலைக்கு அதிமுக மேல இருக்குற பகையை விட பாஜக மேல கோவம் அதிகமா இருக்குற மாதிரி தெரியுது .... இவரோட ஆசைய சொல்லியிருக்காரு ....


bharathi
அக் 12, 2025 08:28

BJP must understand the reality ...bring back Annamalai as TN president else in TN no chance for growth.


Subburamu K
அக் 12, 2025 06:52

TTV statement is absolutely correct. EPS is the number one traitor


மோகனசுந்தரம்
அக் 12, 2025 06:43

தினகரன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. அப்பொழுது தமிழக பாஜக அசிங்கப்பட்டு அவமானப்பட்டு தரித்து நிற்பதை நம் கண்களால் நாம் பார்க்கப் போகிறோம். அண்ணாமலை என்ற சிறந்த ஆளுமையை பதவியிலிருந்து தூக்கிய பொழுதே பிஜேபி நிலை கேள்விக்குறியாகிவிட்டது.


Sun
அக் 12, 2025 06:20

யார் யாரை கழட்டி விட்டா உங்களுக்கு என்ன வந்துச்சு? நீங்கதான் இப்ப அந்த கூட்டணியிலேயே இல்லையே? நீங்க எதுக்கு கவலைப் படுறீங்க?


Haja Kuthubdeen
அக் 12, 2025 09:39

இவுறுமட்டுமா கவலை படுறாரு..எடப்பாடிய சுத்தமா பிடிக்காத அத்தன பேரும் கத்துறானுங்க..கதறுரானுங்க...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை