உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வெறுப்பு பேச்சுகளை ஒடுக்க கிராமங்களில் சமூக கமிட்டி தேவை: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி யோசனை

வெறுப்பு பேச்சுகளை ஒடுக்க கிராமங்களில் சமூக கமிட்டி தேவை: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி யோசனை

''மத நல்லிணக்கத்தை காக்கவும், வெறுப்பு பேச்சுகளை ஒடுக்கவும், ஒவ்வொரு கிராமத்திலும், அனைத்து சமூகத்தினரும் இடம் பெறும் கமிட்டி அமைக்க வேண்டும்,'' என, சமூக சமத் துவ படை தலைவரும், தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான பி.சிவகாமி வலியுறுத்தினார். வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு குற்றங்களை ஒடுக்குவது குறித்த கருத்தரங்கு டில்லியில் நேற்று நடந்தது. இதில், அவர் பேசியதாவது: வெறுப்பு பேச்சுகளை ஒடுக்கி, சமூகத்தில் நல்லிணக்கத்தை காக்க, ஒரு புதிய அணுகுமுறையை பின்பற்ற வேண்டியது அவசியம். வெறுப்பு பேச்சுகளை ஒடுக்குவதற்கான தீர்வு அதிகார வர்க்கத்திடம் இல்லை. பொதுமக்களிடம் இருந்தும், அவர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் இருந்தும் வெளிப்பட வேண்டும். வெறுப்பு பேச்சு மற்றும் குற்றங்கள் அரசியலுடன் மட்டுமே தொடர்புடையதா என்றால் அது, அதை விட ஆழமானது. வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, பஞ்சாயத்து ராஜ் ஆட்சி போன்றவை உயர் ஜாதியினரால் கட்டமைக்கப்பட்டவை. எந்த கேள்வியும் இல்லாமல், அவை பிரபலமாக்கப்படுகின்றன. துாத்துக்குடியில் நான் கலெக்டராக பணியாற்றிய போது, உயர் ஜாதி அதிகாரி ஒருவர் என்னை பட்டியலின கிராமத்திற்குள் செல்லவிடாமல் தடுத்தார். ஏனெனில், அங்கு இருக்கைகள் முறையாக இருக்காது என்ற அற்பமான காரணத்தை கூறினார். அதேபோல், 2009ல் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட போது, பட்டியலின சமூகத்தினர் வசிக்கும் கிராமத்தில் பிரசாரம் செய்வதற்கு, என்னுடன் அரசியல் முகவர்களே வர மறுத்து விட்டனர். ஒவ்வொரு கிராமத்திலும், அனைத்து சமூகத்தினரும் இடம் பெறும் கமிட்டி அமைக்க வேண்டும். அப்போது தான் வெறுப்பு பேச்சுகளை ஒடுக்க முடியும். சமூக நல்லிணக்கத்தையும் காக்க முடியும். இவ்வாறு சிவகாமி பேசினார். - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

spr
செப் 23, 2025 00:54

"மத நல்லிணக்கத்தை காக்கவும், வெறுப்பு பேச்சுகளை ஒடுக்கவும், ஒவ்வொரு கிராமத்திலும், அனைத்து சமூகத்தினரும் இடம் பெறும் கமிட்டி அமைக்க வேண்டும், அரசியல் கட்சிகள், மதம். இனம், ஜாதி போன்றவை குறித்தெல்லாம், தலையிடாமல், பேசாமலிருந்தால், இது அவசியமே இல்லை. ஏனெனில் கருத்து சொன்னவரும் ஒரு காலத்தில் இப்படிப் பேசித்தான் பிரபலமானார். பள்ளிகலீல், முன்பு போல, ஒழுக்கம் மற்றும் அறநெறிக் கருத்துக்களை வலியுறுத்தும் வகுப்புக்களை உருவாக்கினால், இவை குறைந்து போகும்.


Barakat Ali
செப் 22, 2025 19:27

சாதி அரசியலை இவரும் கையிலெடுத்தார் ........


veeramani
செப் 22, 2025 09:41

தென் மாவட்டங்களில் எந்த ஒரு மத சமூகம் மக்களையும் சமமாக நடத்துகிறோம். அவர் அவர் வேலையை மட்டும் செய்தால் போதும். ஒரு சில உயர் பதவி வகிப்பார் அவரை சார்ந்தவர்களுக்கு மட்டும் அதிகாரம் கொடுக்கிறார்களே. எவர், எப்படி கேட்பது. இன்று வரை அனைவரும் ஒற்றுமை காக்கிறோ. ஆனால் சில பொறுப்புள்ள உயர் ஆபிசர்கள்தான் பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள்


Indian
செப் 22, 2025 09:20

இதெல்லாம் மத அரசியல் செய்து பிழைக்கும் பார்ட்டி இடம் சொல்லுங்க


somasundaram ramaswamy
செப் 22, 2025 07:30

சிறந்த யோசனை. ஆனால் அரசியல் கட்சி இல்லாதவர்களாக இருக்க வேண்டும்


Mani . V
செப் 22, 2025 06:30

அப்புடியா? முதலில் வேங்கைவயல் பிரச்சினையை நொட்டிட்டு, அப்புறம் மற்ற ஆணிகளைப் புடுங்கலாம்.


சாமானியன்
செப் 22, 2025 06:12

சுற்றுப்புற தூய்மை மிக மிக அவசியம்.பல்வேறு தரப்பினர் வசிக்கும் பகுதிகட்கு வந்து போக தூய்மை அவசியம். கீழ்சாதி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் அரசியல்வாதிகள் ஓட்டு கேட்கக் கூட வரமாட்டேன் என்கிறார்கள். வந்தாலும் முகக்கவசம். மேடம் சொல்வது அரசியல் ரீதியாக சரியே. ஆனால் எல்லா இடங்கட்கும் அது பொருந்தாது. முயற்சிப்போம். மோடிஜின் தூய்மை இந்தியா திட்டம் இன்னமும் சில கிராமங்களை சென்று அடையவில்லை என்பதே நிசர்சனம். சென்னையிலேயே நான் பல உதாரணங்களை காட்ட முடியும்.


SUBBU,MADURAI
செப் 22, 2025 06:01

வேங்கை வயல் சம்பவத்திற்கு ஆளும்கட்சியான திருட்டு திராவிடமாடல் திமுகவை எதிர்த்து எந்த கண்டன அறிக்கையும் தெரிவிக்காத திருமாவைப் போல இந்த ஓய்வு பெற்ற IAS அதிகாரி தாழ்வாளான சிவகாமி இப்போது கிராமங்களில் வெறுப்பு பேச்சை ஒடுக்க கமிட்டி அமைக்கப் போகிறாராம் தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற புற்றீசல்கள் நிறைய வெளிவரும் அதை தமிழக மக்கள் இனம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
செப் 22, 2025 04:26

வேங்கைவயல் நிகழ்வின் பொது எங்கே போயிருந்தீங்க மேடம் , எப்போ பார்த்தாலும் உயர்சாதி ன்று பேசியே வேறு மதத்தினரை உள்ளே நுழைத்து விட்டீர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ளே வரவே உங்களை விடமாட்டார்கள் என்பது கூட உங்களுக்கு புரியாது


சமீபத்திய செய்தி