உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காரில் ஏற முயன்ற செல்லுார் ராஜு; ஏறக்கூடாது என தடுத்த பழனிசாமி?

காரில் ஏற முயன்ற செல்லுார் ராஜு; ஏறக்கூடாது என தடுத்த பழனிசாமி?

மதுரை: மதுரை அருகே கீழ டிக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வந்தபோது, அவரை வரவேற்று காரில் ஏற முயன்ற முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜுவை தடுத்த பழனிசாமி, 'வேறு காரில் வாங்க' என கூறி அவமதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழகம் முழுதும் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கீழடி அகழ்வாராய்ச்சிக்கு வித்திட்டது அ.தி.மு.க., ஆட்சியில் தான். தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும் கீழடி விவகாரத்தை அரசியலாக்கி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eja1y4iy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பழனிசாமி, ஜூலை இறுதி வாரத்தில் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்டார். இதற்காக ஊர் நுழைவுவாயில் அருகே அவருக்கு, செல்லுார் ராஜு தலைமையில் அ.தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து பழனிசாமி காரில் செல்லுார் ராஜு ஏற முயன்றார். உடனே பழனிசாமி, 'என் காரில் இடமில்லை; வேற காரில் வாங்க' என கூறியதை தொடர்ந்து, அசட்டு சிரிப்புடன் செல்லுார் ராஜு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். பின்னர் அருங்காட்சியகத்தில் பழனிசாமியுடனேயே வந்தார். செல்லுார் ராஜுவை, தன் காரில் ஏற வேண்டாம் எனச் சொல்லி பழனிசாமி தடுக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி, அது வைரலாகி வருகிறது.

இது குறித்து செல்லுார் ராஜு கூறியதாவது:

பழனிசாமி 'இசட்' பிரிவு பாதுகாப்பில் உள்ளார். அவரது காரில் முன்னாள் அமைச்சர்கள் புதுக்கோட்டை விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் பின்புறம் அமர்ந்திருந்தனர். காரில், ஒரு 'சீட்' காலியாக இருந்ததை பார்த்தது ம், தலைவர் காரில் ஏறிக் கொள்ளலாம் என முயற்சித்தேன். ஆனால், அந்த 'சீட்' பாதுகாவலருக்குரியது என தெரிந்து, நான் தயங்கியபோது, 'வேறு காரில் வாங்க' என பழனிசாமி தெரிவித்தார். இதில், வேறு எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

M Ramachandran
ஆக 09, 2025 21:39

அப்போ பழனியின் வேஷ்டி சீக்கிரமா உருவப்படும்.


RRR
ஆக 09, 2025 13:43

ஜெயலலிதா அம்மையார் போல மிகவும் பலம் பொருந்திய தலைவராக தன்னை காட்டிக்கொண்டும் மற்றவர்களை கிள்ளுக்கீரையாக நடத்தியும் எடுபிடி பயனிச்சாமி நடத்தும் கேவலமான நாடகம் இது.


sankaranarayanan
ஆக 09, 2025 11:57

துளி கிடைத்தால் போதுமே எதிர்கட்சிகள் அதை ஊதி பெரிதாக்கி பெருமாளாக்கிவிடுவார்களே


எவர்கிங்
ஆக 09, 2025 11:29

மல்லாக்க விழுந்தாலும் தெர்மாக்கோல் டிண்கு வில் மண் ஒட்டவில்லை


K.Ravi Chandran, Pudukkottai
ஆக 09, 2025 09:51

மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் ஓ.பி.எஸ் பாவம் என ஒரு நிருபர் கூறியதற்கு செல்லூர் ராஜூ வுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வர வேண்டும்? அதன் வினைதான் இந்த எதிர் வினை. அந்த நிருபர் கேட்ட கேள்விக்கு மட்டும் செல்லூர் ராஜீ பதில் சொல்லி இருக்கலாமே? எதற்காக ஓ.பி.எஸ் காக இவர் கோபப் பட வேண்டும்? ஈ.பி.எஸ் செய்தது சரிதான்.


Haja Kuthubdeen
ஆக 09, 2025 09:50

இதெல்லாம் பெரிய விசயமே கிடையாது.ஊதி பெருது படுத்தும் வேலை.மதுரை சுற்றுப்பயணத்தில் முழுக்க முழுக்க செல்லூர் ராஜு அவர்களே தலைமை ஏற்று செய்யப்போறார்.


rama adhavan
ஆக 09, 2025 04:07

இதில் என்ன தவறு கண்டீர்கள்? கூரை மீதா பயணிக்க முடியும்?


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 09, 2025 03:49

ஐயோ பாவம் விஞ்ஞானிக்கு வந்த சோதனை.


Haja Kuthubdeen
ஆக 09, 2025 09:52

ஒரு சோதனையும் வேதனையும் இல்லை.எடப்பாடியின் மதுரை சுற்றுப்பயணம் செல்லூர் தலைமையிலேயே நடக்க போகுது.அதற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடந்து கொண்டு வருது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை